கொஞ்சம் பொறுத்திருந்து பாருங்கள்...வேடிக்கை ஆரம்பித்துவிட்டது என்கிறார் கீர்த்தி ஆசாத் !

Subscribe to Oneindia Tamil

டெல்லி: எனது அடுத்த நடவடிக்கையை பொறுத்திருந்து பாருங்கள் பாஜகவிற்கு வேடிக்கை ஆரம்பித்துவிட்டது என்று அக்கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கீர்த்தி ஆசாத் தெரிவித்துள்ளார்.

டெல்லி கிரிக்கெட் சங்க முறைகேடுகள் தொடர்பாக மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி மீது ஆம் ஆத்மி கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக அவர் பதவி விலகக்கோரி பல்வேறு போராட்டங்களில் ஆம்ஆத்மியினர் ஈடுபட்டு வருகின்றனர்.. ஆம்ஆத்மி கட்சியினர் ஒருபுறம் புகார் தெரிவிக்க, மறுபுறம் சொந்த கட்சியைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கீர்த்தி ஆசாத்தும் அருண் ஜேட்லிக்கு எதிராக பல்வேறு புகார்களை அடுக்கியிருந்தார்.

Wait and watch what I do next says kirti Azad

இதனால் கீர்த்தி ஆசாத் கட்சியில் இருந்து இடை நீக்கம் செய்யப்படுவதாக பா.ஜ.க. தெரிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பை கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா வெளியிட்டார். கட்சியின் கொள்கைகளை மீறி செயல்பட்டதற்காகவும், அருண் ஜேட்லியை தாக்கி எதிராக பேசியதற்காகவும் கட்சியில் இருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கீர்த்தி ஆசாத் கூறுகையில், என்னுடைய அடுத்த நடவடிக்கையை பொறுத்திருந்து பாருங்கள். என்னை நீக்கியது பாஜக-வுக்கு துரதிர்ஷ்டம் தான். கட்சி நடவடிக்கைகளுக்கு எதிராக நான் எங்கு செயல்பட்டேன்?.,யாரையும் நான் தனிப்பட்ட முறையில் சாடவில்லை. நான் எழுப்பிய பிரச்னை மிகப் பழமையானது. கடந்த 9 ஆண்டுகளாக இந்த பிரச்சினைக்காக நான் குரல் கொடுத்து வருகிறேன். நான் கட்சிக்கு விரோதமாக என்னென்ன நடவடிக்கைகளில் ஈடுபட்டேன் என்பதை பாஜக விளக்க வேண்டும். எனக்கு யார் மீதும் தனிப்பட்ட விரோதம் இல்லை என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+