சிறையில் உள்ள கன்யா குமாரின் பேஸ்புக் பக்கம் "ஹேக்" செய்யப்பட்டதா?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தேசத் துரோக வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் கன்யா குமாரின் பேஸ்புக் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவரது பேஸ் புக் புரபைல் படத்தை யாரோ சிலர் மாற்றியுள்ளனர். ராணுவத்தினர் சிலர் கூடி தேசியக் கொடியை ஏற்றுவது போன்ற புகைப்படம் புரபைல் படமாக மாற்றப்பட்டுள்ளது.

Was Kanhaiya Kumar's Facebook page hacked?

இதையடுத்து அவரது பக்கத்தை யாரோ ஹேக் செய்துள்ளதாக அவருக்கு ஆதரவாக போராடி வரும் மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக டெல்லி சைபர் கிரைம் போலீஸில் புகார் தரவுள்ளனர்.

நேற்று இரவு 8.30 மணிக்கு கன்யா குமாரின் புரபைல் படம் மாற்றப்பட்டுள்ளது. படம் மாற்றப்பட்ட ஒரு மணி நேரத்தில் 600 கமெண்டுகள் குவிந்துள்ளன.

பிப்ரவரி 12ம் தேதி கன்யா குமார் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவரது பேஸ்புக் பக்கம் ஹேக் செய்யப்பட்டது குறித்து பல்கலைக்கழக மாணவர் கவுன்சிலைச் சேர்ந்தவர்கள் கூறுகையில், அவரது அக்கவுண்ட் வேண்டும் என்றே உள்நோக்கத்துடன் ஹேக் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து டெல்ல போலீஸின் சைபர் பிரிவில் புகார் செய்வோம் என்று கூறியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+