கர்நாடகத்தின் கபினி அணையிலிருந்து 15,000 கனஅடி நீர் திறப்பு

கர்நாடகத்தின் கபினி அணையிலிருந்து 15,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகத்தின் கபினி அணையிலிருந்து 15,000 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

கர்நாடகத்துக்கும், தமிழகத்துக்கும் காவிரி விவகாரத்தில் பல ஆண்டுகளாக பிரச்சினை இருந்து வருகிறது. இந்நிலையில் கர்நாடக அணைகளில் தண்ணீர் இருந்து உச்சநீதிமன்றமே உத்தரவிட்ட போதிலும் தண்ணீர் இல்லை என்று பஞ்சப் பாட்டு பாடும் கர்நாடக அரசு எப்போதும் நீதிமன்றத் தீர்ப்பை மதிப்பதில்லை.

இந்நிலையில் காவிரி நீர் எந்த ஒரு மாநிலத்துக்கும் சொந்தமில்லை என்றும் தண்ணீரை திறந்துவிட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து காவிரி மேலாண்மை வாரியம் கோரிக்கை தமிழகத்தில் எழுந்தது.

விவசாயிகள் கோரிக்கை

விவசாயிகள் கோரிக்கை

கர்நாடகத்தில் காவிரி நீரை திறந்துவிடுமாறு விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். எனினும் எதற்கும் செவிசாய்க்காமல் இருந்தது கர்நாடகம்.

கனமழை

கனமழை

தென்மேற்கு பருவமழை தொடங்கி தற்போது தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் கர்நாடகத்தில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை கொட்டியுள்ளது. இந்த மழையால் கபினி உள்ளிட்ட பெரும்பாலான அணைகள் நிரம்பிவிட்டன.

15,000 கனஅடி நீர்

15,000 கனஅடி நீர்

கபினி அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 30,000 கன அடியாக இருக்கிறது. இதனால் கபினி அணையில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 15,000 கன அடி நீர் கடந்த ஜூன் 14-ஆம் தேதி திறக்கப்பட்டது.

அதிகரிப்பு

அதிகரிப்பு

இதைத் தொடர்ந்து இரண்டு, மூன்று நாட்களுக்கு கபினியில் இருந்து திறந்துவிடப்பட்டது. இந்நிலையில் அணையில் தண்ணீரின் அளவு குறைந்ததை அடுத்து அணையிலிருந்து வினாடிக்கு 1000 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது மீண்டும் கபினி அணையில் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளதால் தற்போது மீண்டும் 15,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+