கர்நாடகத்தின் கபினி அணையிலிருந்து 15,000 கனஅடி நீர் திறப்பு
கர்நாடகத்தின் கபினி அணையிலிருந்து 15,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
பெங்களூர்: கர்நாடகத்தின் கபினி அணையிலிருந்து 15,000 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
கர்நாடகத்துக்கும், தமிழகத்துக்கும் காவிரி விவகாரத்தில் பல ஆண்டுகளாக பிரச்சினை இருந்து வருகிறது. இந்நிலையில் கர்நாடக அணைகளில் தண்ணீர் இருந்து உச்சநீதிமன்றமே உத்தரவிட்ட போதிலும் தண்ணீர் இல்லை என்று பஞ்சப் பாட்டு பாடும் கர்நாடக அரசு எப்போதும் நீதிமன்றத் தீர்ப்பை மதிப்பதில்லை.
இந்நிலையில் காவிரி நீர் எந்த ஒரு மாநிலத்துக்கும் சொந்தமில்லை என்றும் தண்ணீரை திறந்துவிட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து காவிரி மேலாண்மை வாரியம் கோரிக்கை தமிழகத்தில் எழுந்தது.

விவசாயிகள் கோரிக்கை
கர்நாடகத்தில் காவிரி நீரை திறந்துவிடுமாறு விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். எனினும் எதற்கும் செவிசாய்க்காமல் இருந்தது கர்நாடகம்.

கனமழை
தென்மேற்கு பருவமழை தொடங்கி தற்போது தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் கர்நாடகத்தில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை கொட்டியுள்ளது. இந்த மழையால் கபினி உள்ளிட்ட பெரும்பாலான அணைகள் நிரம்பிவிட்டன.

15,000 கனஅடி நீர்
கபினி அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 30,000 கன அடியாக இருக்கிறது. இதனால் கபினி அணையில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 15,000 கன அடி நீர் கடந்த ஜூன் 14-ஆம் தேதி திறக்கப்பட்டது.

அதிகரிப்பு
இதைத் தொடர்ந்து இரண்டு, மூன்று நாட்களுக்கு கபினியில் இருந்து திறந்துவிடப்பட்டது. இந்நிலையில் அணையில் தண்ணீரின் அளவு குறைந்ததை அடுத்து அணையிலிருந்து வினாடிக்கு 1000 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது மீண்டும் கபினி அணையில் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளதால் தற்போது மீண்டும் 15,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
-
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்?












Click it and Unblock the Notifications