கங்கை ஆற்றில் இனி கார்களும் நீந்திச் செல்லும்...!
டெல்லி: கங்கை ஆற்றில் வர்த்தக ரீதியிலான சரக்குக் கப்பல் போக்குவரத்தை தொடங்குகிறது மத்திய அரசு. இன்று இதற்கான அடிக்கல் நாட்டு விழா காசியில் உள்ள ராம் காட் பகுதியில் நடைபெறுகிறது.
முதல் கட்டமாக இன்று இரு சரக்குக் கப்பல்கள் மூலமாக 200 மாருதி சுசுகி கார்கள் கொல்கத்தா அருகே உள்ள ஹால்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

காசி என்றதும் பிறப்பு, இறப்பு, மோட்சம் தான் நினைவுக்கு வரும். புனித நகராக கருதப்படும் இங்கு வந்து இறுதிக் காலத்தைக் கழிக்க பலரும் விரும்புவார்கள். காரணம், இங்கு வந்து உயிரை விட்டால் மோட்சம் அடைய முடியும், சொர்க்கத்திற்குப் போக முடியும் என்பது நம்பிக்கை.
இந்த நிலையில் காசியின் முகம் மாறப் போகிறது. கங்கை ஆற்றில் சரக்குப் போக்குவரத்தை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. சரக்குக் கப்பல் போக்குவரத்தை மத்திய அரசு தொடங்கவுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொண்டு மத்திய கப்பல் துறை அமைச்சர் நிதின் கத்காரி ராம்காட் பகுதியில் அடிக்கல் நாட்டவுள்ளார்.

முதல் கட்டமாக இரு கப்பல்களில் 200 மாருதி சுசுகி கார்களும், கட்டுமானப் பொருட்களும் ஹால்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன. நீர் வழி போக்குவரத்தின் மூலமாக சரக்குப் போக்குவரத்து செலவுகள் பெருமளவு குறையும் என்றும் சாலை மார்க்கமான வர்த்தகப் போக்குவரத்தை விட நீர் வழி போக்குவரத்து சிக்கனமானது என்றும் கத்காரி கூறியுள்ளார்.
வாரணாசி - ஹால்தியா இடையே 5 பெரிய நீர்வழிப் போக்குவரத்து முனையங்களையும் மத்திய அரசு ஏற்படுத்தவுள்ளது. இதன் மூலம் மிகப் பெரிய அளவில் நீர் வழிப் போக்குவரத்து கங்கை ஆற்றில் தொடங்கவுள்ளது. இந்தத் திட்டத்திற்காக ரூ. 7000 கோடி அளவுக்கு நிதியையும் மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
வாரணாசியில் அமைக்கப்படும் மிகப் பெரிய முனையமானது அடுத்த 2018ம் ஆண்டில் முடிவடையும். ரூ. 170 கோடி செலவில் இது உருவாக்கப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications