For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நானும், என் மகன்களும் பதவிக்காக அலையவில்லை: லாலு மனைவி ராப்ரி தேவி

By Siva
Google Oneindia Tamil News

We do not crave for any post: Rabri Devi
பாட்னா: தானும், தனது மகன்களும் பதவிக்காக அலையவில்லை என்று ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவின் மனைவி ராப்ரி தேவி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

எதிரிகளின் சதிக்கு தலைவர் லாலு பிரசாத் எப்படி பலிகடா ஆனார் என்பதை நானும், எனது மகன்களும் பீகார் முழுவதும் பயணம் செய்து மக்களுக்கு தெரிவிப்போம். வரும் நவம்பர் 22ம் தேதி சிபிஐ நீதிமன்றத்தில் முதல்வர் நிதிஷ் குமார், ஷிவானந்த் திவாரி மற்றும் ராஜிவ் ரஞ்சன் ஆகிய 3 ஐக்கிய ஜனதாதள தலைவர்கள் மீதான வழக்கு விசாரணை துவங்குகிறது. அவர்களின் நிலைமை என்னவாகும் என்பதை அறிய பீகார் மக்கள் காத்திருக்கிறார்கள்.

அந்த 3 தலைவர்களுக்கும் உரிய தண்டனை வழங்கப்படுவதை பார்க்க ராஷ்ட்ரிய ஜனதாதளமும், பீகார் மக்களும் விரும்புகிறார்கள். லாலு மீதான குற்றங்களுக்கு எந்தவித ஆதாரமும் இல்லை. அவர் மீது தவறாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

நானும், என் மகன்களும் பதவிக்காக அலையவில்லை. எனக்கும், என் மகன்களுக்கும் கட்சியில் எந்த பதவியும் வேண்டாம் என்றார்.

English summary
Amid speculation that she might take over the leadership of RJD in the absence of her husband Lalu Prasad, former chief minister Rabri Devi on Tuesday said she and her sons do not crave for any post but would work for party. "We do not have any craving for the post. I and my sons do not want any post in the party," Rabri Devi told reporters.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X