மத்திய பட்ஜெட் அறிவிப்புகள், உடனுக்குடன்!
சென்னை: பிப்ரவரி 1ம் தேதி ஒரு முக்கியமான நாள். மத்திய அரசு 2018-19ம் நிதியாண்டுக்கான நிதி நிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறது.
நாட்டு மக்களின் வாழ்க்கைத்தரத்தை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிப்பது மத்திய அரசின் பட்ஜெட். அதை உடனுக்குடன் நீங்கள் அறிந்துகொள்ள 'லைவாக' உங்களுக்கு தருகிறோம். இந்த பகுதியை லைவ் அப்டேட்டுகளுக்காகவும், துரிதமான செய்திகளுக்காகவும் பாருங்கள்.
லைவ் அப்டேட்டுகள் மட்டுமின்றி, பட்ஜெட் அறிவிப்பின் விரிவான தகவல்கள், பட்ஜெட் அறிவிப்பினால் நாட்டு பொருளாதாரத்திலும், மக்களின் வாழ்க்கையிலும் ஏற்படப்போகும் மாற்றங்கள் உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய கட்டுரைகளையும் தருகிறோம்.
தற்போதைய மோடி அரசின் ஆட்சி நிறைவு காலத்தில் தாக்கல் செய்யப்படும் முழுமையான பட்ஜெட் இது என்பதால் மக்களை ஈர்க்கும் அறிவிப்புகள் வெளியாகுமா?, அல்லது பொருளாதார சீர்திருத்தமே முன்னிலை பெறுமா? என்ற கேள்விகளுக்கு விடையளிக்கும் நாள்தான் பிப்ரவரி 1. பட்ஜெட் செய்திகளை டெய்லிஹன்ட் ஆப்பில் உடனுக்குடன், முழுமையாக காணலாம்.