2015-க்கு பிறகு வந்தவர்களை நாடு கடத்துவோம்.. சிஏஏ குறித்து அசாம் முதல்வர் பரபர கருத்து!
கவுகாத்தி: விதிகளின் படி 2015 ஆம் ஆண்டிற்கு பிறகு வந்தவர்களை நாடு கடத்துவோம் என்று அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா கூறியுள்ளார். அசாமில் சிஏஏவிற்கு எதிர்ப்பு உள்ள நிலையில் அவர் இவ்வாறு கூறியிருக்கிறார்.
சிஏஏ சட்டத்தின் படி 2015 க்கு பிறகு குடியேறியவர்களை நாடு கடத்துவோம் என்று அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அசாமில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக ஹிமந்த பிஸ்வ சர்மா பதவி வகித்து வருகிறார். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் கடந்த மே மாதம் சிஏஏ சட்டத்தை மத்திய உள்துறை அமைச்சகம் அமல்படுத்தியது. அசாம் மாநிலத்திற்கு குடியுரிமை திருத்த சட்டம் முக்கியத்துவமற்றது என்றும், அசாமில் குறைந்த அளவிலே வெளிநாட்டில் இருந்து குடியேறியவர்கள் இருப்பதால் என்றும் கடந்த மார்ச் மாதம் ஹிமந்த பிஸ்வ சர்மா கூறியிருந்தார்.

ஹிமந்த பிஸ்வ சர்மா பேச்சு: குடியுரிமை திருத்த சட்ட்டத்திற்கு எதிராக அசாமில் மாணவ அமைப்புகளும் 30 க்கு மேற்பட்ட பிற அமைப்புகளும் கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டன. குடியுரிமை திருத்த சட்டத்தின் நகலை எரித்து போராட்டத்தில் அமைப்புகள் ஈடுபட்டு இருந்தன. அசாமில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்புகள் கிளம்பியிருந்த நிலையில், சிஏஏ விதிகளின் படி 2015 க்கு பிறகு குடியேறியவர்களை நாடு கடத்துவோம் என்று ஹிமந்த பிஸ்வ சர்மா கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடு கடத்துவோம்: இது தொடர்பாக ஹிமந்த பிஸ்வ சர்மா கூறியிருப்பதாவது:- சிஏஏ சட்டத்தின் கீழ் குடியுரிமை கேட்டு வெறும் 2 பேர் மட்டுமே விண்ணப்பித்து இருக்கிறார்கள். 2015 க்கு முன்பாக வந்தவர்கள் சிஏஏ சட்டத்தின் கீழ் விண்ணப்பம் செய்ய வேண்டும்.
விண்ணப்பிக்காவிட்டால் அவர்கள் மீது வழக்கு தொடரப்படும். இதுதான் சட்டப்பூர்வ அறிவுறுத்தல்கள்.. 2015க்கு பிறகு வந்தவர்களை நாடு கடத்துவோம். மொத்தம் 5 விண்ணப்பங்கள் வரப்பெற்றன. இதில் விசாரணையின் போது 3 பேர் வரவில்லை.. எனவே 2 பேர் மட்டுமே விண்ணப்பித்து இருக்கிறார்கள்" என்றார்.
சிஏஏ சட்டம்: பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் சிறுபான்மையினராக இந்துக்கள், பார்சிகள், கிறிஸ்தவர்கள், ஜெயின் உள்ளிட்ட பிற மதங்களை சேர்ந்தவர்கள் உள்ளனர். இவர்கள் அந்த நாட்டில் மதரீதியிலான துன்புறுத்தலுக்கு ஆளாவதாக குற்றச்சாட்டு உள்ளது. பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் நாட்டில் சிறுபான்மையினராக இருப்போருக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்க மத்திய அரசு முடிவு செய்தது.
அமலுக்கு வந்ததாக: இதற்காக மத்திய அரசு சார்பில் சிஏஏ எனும் குடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டு வருவதில் முனைப்பு காட்டியது. மேலும் இந்திய குடியுரிமை சட்டம் 1955ல் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்பிறகு இந்த குடியுரிமை திருத்த சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் செய்யப்பட்டது. இந்த சிஏஏ சட்டம் கடந்த மார்ச் 11ம் தேதி அமலுக்கு கொண்டு வரப்பட்டதாக மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டது.
இந்த குடியரிமை திருத்தம் சட்டம் என்து பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானில் மதரீதியிலான துன்புறுத்தலுக்கு ஆளாகி இந்தியாவில் தஞ்சம் அடைபவர்களுக்கு குடியுரிமை வழங்க வழிவகுக்கிறது. அதன்படி அந்த 3 நாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறும் இந்துக்கள், சீக்கியர்கள், பவுத்தர், ஜைனர்கள், பார்சி, கிறிஸ்தவ மக்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க இந்த சட்ட திருத்தம் வழிவகை செய்யும்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications