Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வழக்குகளை கண்டு அஞ்சாமல் மக்களுக்காக போராட்டத்தை தொடருவோம்: சோனியா, ராகுல் பேட்டி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கை தொடர்பான வழக்கில் டெல்லி பாட்டியாலா கோர்ட்டில் இன்று நேரில் ஆஜராகிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல்காந்தி ஆகியோருக்கு நிபந்தனையற்ற ஜாமீன் வழங்கினார் நீதிபதி.

இதன்பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய சோனியா காந்தி, "சட்டத்தை மதித்து நீதிமன்றத்துக்கு நேரில் சென்று வழக்கை சந்தித்தோம். சட்டம் அனைவருக்கும் பொதுவானது. சட்டத்தின்மீது எங்களுக்கு நம்பிக்கையுள்ளது. உண்மை விரைவில் வெளிவரும்.

We will keep fighting for the poor, not move back an inch says Rahul Gandhi

எங்களை குறிவைத்துதான் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆனால் வழக்குகளை கண்டு ஒருபோதும் அஞ்சமாட்டோம். பாஜகவுக்கு எதிரான போராட்டம் தொடரும். இவ்வாறு சோனியா தெரிவித்தார்.

ராகுல் காந்தி பேசியதாவது: எங்களுக்கு எதிரான தவறான குற்றச்சாட்டுக்களை மோடி முன்வைத்துள்ளார். எங்களை மடக்கி விடலாம் என்று கருதுகிறார். ஆனால் ஒரு இன்ச் கூ எங்கள் போராட்டத்தில் இருந்து பின்வாங்க மாட்டோம். ஏழைகளுக்கான, எங்கள் போராட்டம் தொடரும் என்றார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கோ, சோனியா, ராகுலுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சி அவர்கள் பின்னால் நிற்பதாக தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+