என் மகனுக்கு மைக்ரோசாப்ட்டில் ரூ.1 கோடி சம்பளத்தில் வேலை: வெல்டர் ஆனந்தக் கண்ணீர்

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: ஐஐடி கராக்பூரில் இறுதியாண்டு படிக்கும் வெல்டரின் மகனுக்கு மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ.1.02 கோடி சம்பளத்தில் வேலை கிடைத்துள்ளது.

பீகார் மாநிலம் காகரியா பகுதியில் உள்ள சான்ஹவ்லி கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரகாந்த். வெல்டிங் வேலை செய்பவர். அவரது மகன் வத்சல்யா சிங் சவுகான்(21). அவர் பிளஸ் டூ பொதுத் தேர்வில் 75 சதவீத மதிப்பெண்கள் பெற்றார். அதன் பிறகு கடந்த 2011ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள பயிற்சி மையத்தில் ஐஐடியில் சேர பயிற்சி பெற்றார்.

ஐஐடி-ஜேஇஇ தேர்வில் அனைத்து இந்திய அளவில் 382வது இடத்தை பிடித்தார். இதையடுத்து அவர் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ஐஐடி கராக்பூரில் சேர்ந்தார். அங்கு இறுதியாண்டு படித்து வரும் அவருக்கு மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் வேலை கிடைத்துள்ளது.

அவரின் ஆண்டு வருமானம் ரூ.1.02 கோடி ஆகும்.

இது குறித்து சவுகானின் தந்தை சந்திரகாந்த் கூறுகையில்,

நான் வங்கியில் ரூ.3.50 லட்சம் கல்விக் கடன் பெற்று அவனை ஐஐடியில் சேர்த்தேன். அப்பா, எனக்கு மைக்ரோசாப்ட்டில் வேலை கிடைத்துள்ளது என்று அவன் கூறியதை கேட்டு ஆனந்தக் கண்ணீர்விட்டேன் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+