க்ளீன் ஸ்வீப் மம்தா.. மேற்கு வங்கத்தில் கியர் எடுக்காத பாஜக.. காங். எங்கே? ஜன்மத் எக்சிட் போல்ஸ்
கொல்கத்தா: மேற்கு வங்கத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று (ஏப்ரல் 29) நிறைவடைந்துள்ள நிலையில், 'ஜன்மத் போல்ஸ்' (Janmat Polls) வெளியிட்டுள்ள எக்சிட் போல் முடிவுகள் மம்தா பானர்ஜிக்கும் அவரது நிர்வாகிகளுக்கும் நிம்மதி கொடுப்பதாக அமைந்துள்ளன. மற்ற பல நிறுவனங்கள் பாஜகவுக்கு ஆதரவாகக் கணித்துள்ள நிலையில், ஜன்மத் மட்டும் மம்தா ஒரு இமாலய வெற்றியைப் பெறுவார் என்று கணித்துள்ளது.
மேற்கு வங்கத்தின் 294 தொகுதிகளுக்கும் தேர்தல் திருவிழா முடிவுக்கு வந்துள்ளது.. கடந்த வாரம் அங்கு முதலாம் கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில், இப்போது 2ம் கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ளது. இதற்கிடையே இன்று எக்சிட் போல் முடிவுகள் அனலைக் கிளப்புகின்றன. பாஜகவுக்குச் சாதகமான பல கணிப்புகளுக்கு மத்தியில், 'ஜன்மத் போல்ஸ்' வெளியிட்டுள்ள முடிவுகள் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களைக் குஷியில் ஆழ்த்தியுள்ளன.

ஆட்சியைப் பிடிக்கத் தேவையான 148 இடங்களை விட மிக அதிகமான இடங்களை மம்தா பானர்ஜி கைப்பற்றுவார் என இந்தக் கணிப்பு கூறுகிறது.
திரிணாமுல் காங்கிரஸ்: 195 - 205 இடங்கள்
பாஜக : 80 - 90 இடங்கள்
காங்கிரஸ்: 01 - 03 இடங்கள்
இடதுசாரிகள் (LEFT): 00 - 01 இடங்கள்
இதர கட்சிகள் (OTH): 03 - 05 இடங்கள்
இந்தக் கணிப்பின்படி பார்த்தால், 2021 தேர்தலைப் போலவே இந்த முறையும் 200 இடங்களை நெருங்கி மம்தா பானர்ஜி ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்யப்போகிறார் எனத் தெரிகிறது.
மேற்கு வங்கத் தேர்தல் களம் இப்போது இரண்டு துருவங்களாகப் பிரிந்து நிற்கிறது. மேட்ரைஸ், பி-மார்க் போன்ற நிறுவனங்கள் பாஜக-வுக்கு ஆதரவாகக் கூறினாலும், ஜன்மத் போல்ஸ் மற்றும் பீப்பிள்ஸ் பல்ஸ் போன்றவை மம்தாவுக்கு ஆதரவாக நிற்கின்றன. 15 ஆண்டுக்காலம் ஒரு கட்சி ஆட்சியில் இருக்கும் போது எதிர்ப்பு இருக்கவே செய்யும். ஆனால், அதையும் தாண்டி வெல்வது சாதாரண காரியமல்ல. இருப்பினும், இது எக்சிட் போல் தான்.. ரியல் முடிவுகள் மே 4ம் தேதி தான் தெரிய வரும்.












Click it and Unblock the Notifications