ரசகுல்லாவுக்காக ஒடிஷாவுடன் தொடரும் யுத்தம்.. புவிசார் குறியீட்டுக்கு விண்ணப்பித்தது மேற்கு வங்க அரசு

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: இனிப்புப் பண்டமான ரசகுல்லா தங்கள் மாநிலத்துக்கு சொந்தமானது; ஆகையால் புவிசார் குறியீடு அளிக்கக் கோரி மேற்கு வங்க அரசு விண்ணப்பித்துள்ளது.

ரசகுல்லா இனிப்புப் பண்டத்துக்காக அண்டை மாநிலங்களான ஒடிஷாவும் மேற்கு வங்கமும் உரிமை கோரி வருகின்றன. தங்கள் மாநிலங்களுக்கே புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என்பதும் இரு மாநிலங்களின் கோரிக்கை.

West Bengal submits application for rosogolla GI tag

அண்மையில் ஒடிஷா மாநில அரசு இதற்காக 3 குழுக்களைக் கூட அமைத்திருந்தது. ஒடிஷாவைப் பொறுத்தவரையில் 300 ஆண்டுகளுக்கும் மேலாக பூரி ஜகநாதர் யாத்திரையின் போது லட்சுமி தாயாருக்கு பூரி ஜகன்னாதர் அன்போடு கொடுக்கும் பண்டம் இது; ஆகையால் இது எங்கள் மாநிலத்துக்கு உரியது என்கிறது.

ஆனால் மேற்குவங்கமோ 1868ஆம் ஆண்டு நபின் சந்திரதாஸ் என்பவரால்தான் மேற்குவங்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது இந்த ரசகுல்லா என்கிறது. இந்த நிலையில் ரசகுல்லாவுக்கான புவிசார் குறியீடு கோரி மேற்கு வங்க அரசு விண்ணப்பித்துள்ளது.

இது குறித்து அம்மாநில அறிவியல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரபிரஞ்சன் சட்டோபாத்யாய கூறுகையில், முதலமைச்சர் மமதா பானர்ஜி ஆதரவுடன் செப்டம்பர் 18-ந் தேதியன்றே புவிசார் குறியீடு கோரி விண்ணப்பித்துவிட்டோம்; இது எங்கள் மாநிலத்துக்கே கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+