மே.வங்க இடைத்தேர்தலில் திரிணாமுல் வெற்றி.. அராஜக அரசியலை மக்கள் நிராகரித்தனர்- மமதா
Recommended Video
கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் 3 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தின் காரக்பூர் சதார், கரீம்பூர், கலியா கஞ்ச் ஆகிய 3 சட்டசபை தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டன. வாக்குகள் எண்ணப்பட்டது முதலே 3 தொகுதிகளிலும் திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலை வகித்தது.

தற்போது 3 தொகுதிகளிலும் திரிணாமுல் வென்றுள்ளது இதனால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் மகிழ்ச்சி கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இத்தேர்தல் முடிவுகள் குறித்து மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜி கூறியதாவது:
பாஜகவின் அராஜக அரசியலுக்கான விலையை பாஜக கொடுத்திருக்கிறது. இந்த மண்ணின் மக்களை அவமரியாதை செய்ததன் பலனை பாஜக அனுபவிக்கிறது. இந்த வெற்றியானது மேற்கு வங்க மக்களின் வெற்றியாகும்.
பாஜகவின் அணுகுமுறை நீடித்தால் இதே பாடத்தை கற்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications