திடீரென ஏற்பட்ட "ஜெர்க்"... கான்பூர் ரயில் விபத்துக்குக் காரணம்... முதற்கட்ட விசாரணையில் தகவல்
95 பேரை பலிகொண்ட கான்பூர் ரயில் விபத்துக்கான காரணம் என்பது குறித்து முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கான்பூர்: உத்தரப்பிரதேச மாநிலம் பொக்ரியான் என்ற இடத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்குள்ளானதற்கான காரணம் என்ன என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

பாட்னா-இந்தூர் எக்ஸ்பிரஸ் உத்தரப்பிரதேச மாநிலம் பொக்ரியான் என்ற இடத்தில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் ரயிலின் 14 பெட்டிகள் ஒன்றன் மீது ஒன்று மோதியதில் பெட்டிகள் உருக்குலைந்து போயின. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது. காயமடைந்த 150க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. அதில் ஜான்சி-கான்பூர் சந்திப்பில் தண்டவாளத்தில் ஏற்பட்ட திடீர் அதிர்வே ரயில் தடம்புரண்டதுக்கு காரணம் என தெரியவந்துள்ளது. அது என்ன அதிர்வு என்பது குறித்து தற்போது விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications