பயணிகளின் காது, மூக்கில் இருந்து கொட்டிய ரத்தம்.. ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் நடந்தது என்ன?
ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் பயணித்த பல பயணிகளுக்கு திடீர் என்று காது மற்றும் மூக்கில் இருந்து ரத்தம் கொட்டி இருக்கிறது.
Recommended Video

மும்பை: ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் பயணித்த பல பயணிகளுக்கு திடீர் என்று காது மற்றும் மூக்கில் இருந்து ரத்தம் கொட்டி இருக்கிறது. இதற்கு காரணம் என்ன என்று தற்போது விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த பிரச்சனையில் சிக்கியது ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான பி737 விமானம் ஆகும். மும்பையில் இருந்து ஜெய்ப்பூர் நோக்கி இந்த விமானம் சென்றுள்ளது. இன்று காலை இந்த சம்பவம் நடந்துள்ளது.
இதில் மொத்தம் 170 பேர் பயணம் செய்து இருக்கிறார்கள். இதில் 30 பயணிகளுக்கு மூக்கு மற்றும் காதுகளில் இருந்து ரத்தம் வந்துள்ளது. இதற்கான விளக்கம் தற்போது அளிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக என்ன செய்வார்கள்
பொதுவாக விமானம் மேலே செல்ல செல்ல விமானத்தின் உட்பகுதியில் (கேபின் பிரஷர்) அழுத்தத்தில் மாற்றம் ஏற்படும். அதேபோல் வெளி புறத்திலும் அழுத்த மாற்றம் ஏற்படும். உட்புறத்தில் வெளிப்புற அழுத்தத்திற்கு ஏற்றவாறு அழுத்தத்தை தொடர வேண்டும். இதை கட்டுப்படுத்த பல்வேறு கருவிகள் விமானத்திற்குள் இருக்கும். இதை சரியாக கட்டுப்படுத்துவதன் மூலமே எவ்வளவு உயரம் சென்றாலும், உள்ளே பயணிகள் எளிதாக சுவாசிக்க முடிகிறது.

தவறு
இந்த நிலையில்தான், இந்த கேபின் பிரஷரை தொடக்கத்தில் விமானம் புறப்படும் முன் சரி செய்யாமல் விட்டு இருக்கிறார்கள். இதில் ஒவ்வொரு முறை விமானம் புறப்படும் முன்னும் சரியான அளவு அழுத்தத்தை கொடுக்க வேண்டும். அப்போதுதான், விமானத்திற்குள் சரியான காற்று அழுத்தமும், ஆக்சிஜனும் இருக்கும். ஆனால் ஜெட் ஏர்வேஸில் இன்று இதை செய்ய விமானிகள் மறந்து இருக்கிறார்கள்.

நடந்தது என்ன
இதனால்தான் உள்ளே இருந்த பயணிகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு இருக்கிறது. தவறான அழுத்தம் காரணமாக உடலில் இருந்து ரத்தம் வெளியேறி இருக்கிறது. மொத்தமாக 30 பயணிகளுக்கு இப்படி காது, மூக்குகளில் இருந்து ரத்தம் வெளியேறி உள்ளது. இவர்கள் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

எப்போது நடக்கும்
பொதுவாக புதிதாக விண்வெளியில் நடக்க பயிற்சி எடுக்கும் போது விண்வெளி வீரர்களுக்கு இப்படி ரத்தம் வருவது வழக்கம். இது உடலில் ஏற்படும் சிறிய அழுத்த மாறுபாடு காரணமாகவும், ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாகவும் நடக்க கூடியது. சரியான முதலுதவிகள் மூலம் இதை சரி செய்ய முடியும்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications