Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புராரி "மாஸ்" தற்கொலை.. விடை தெரியாத கேள்விகள்... புரியாத புதிரானது 11 பேரின் இறுதி முடிவு

புராரி கொத்தாக 11 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் சில புரியாத புதிர்கள் உள்ளன.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் உள்ள புராரி பகுதியில் 11 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் சில விடை தெரியாத கேள்விகள் எழுந்துள்ளன.

டெல்லியில் கடவுளை ரட்சிக்க செல்வதாக 11 பேர் மூட நம்பிக்கையின் காரணமாக தற்கொலை செய்து கொண்டனர். இதுதொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தினம் ஒரு தகவல் இந்த வழக்கில் போலீஸாருக்கு கிடைத்த வண்ணம் உள்ளன. இதுவரை10-க்கும் மேற்பட்ட டைரிகள் மீட்கப்பட்டுள்ளன. தற்கொலை செய்வதற்காக தங்களது ஃபர்னிச்சர் கடையிலிருந்து 5 ஸ்டூல்களை எடுத்துக் கொண்டு சென்றுள்ளனர்.

புரியாத கேள்வி

புரியாத கேள்வி

அதுபோல் கழுத்தை இறுக்கும் ஒயர்களையும் எடுத்துச் சென்றனர். இவையெல்லாம் சிசிடிவி கேமராவில் காணப்பட்டது. இந்நிலையில் இந்த சம்பவத்தில் சில புரியாத கேள்விகளும், வெளிவராத உண்மைகள் உள்ளன.

சிற்றுண்டி

சிற்றுண்டி

தற்கொலை சம்பவம் குறித்து தகவலறிந்த போலீஸார் வீட்டுக்கு வந்ததும் சமையலறையில் சென்று பார்த்துள்ளனர். அந்த குடும்பத்தினர் மறுநாள் சிற்றுண்டி செய்யும் எண்ணத்தில் இருந்துள்ளது. அங்கு சென்று பார்த்தபோது மறுநாள் சிற்றுண்டி தயார் செய்ய கடலை பருப்பை நீரில் ஊற வைத்திருந்தது தெரியவந்தது.

சாவது என்றால்...

சாவது என்றால்...

தயிர் செய்வதற்காக பாலை உரைவிட்டிருந்தனர். சாவது என்றால் இதையெல்லாம் ஏன் செய்ய வேண்டும். டைரியில் எழுதியுள்ளது போல் லலித் அவரது தந்தையின் ஆத்மா போல் செய்வார் என்றால் இது ஏன் நாராயணி தேவியின் மூத்த மகன் தினேஷ் மற்றும் அவரது மகள் சுஜாதா ஆகியோருக்கு ஏன் தெரிந்திருக்கவில்லை. போலீஸார் விசாரணையில் டைரியில் உள்ளவை உண்மையில்லை என்று கூறியிருந்தனர்.

திருமண ஏற்பாடு

திருமண ஏற்பாடு

இறைவனை அடைய வேண்டும் என்று குடும்பத்தினர் திட்டமிட்டிருந்தால் இது அவரது உறவினர்களுக்கு தெரியாமல் போனது ஏன். நாராயணி தேவியின் பேத்தி பிரியங்காவுக்கு இந்த ஆண்டு இறுதியில் திருமணம் நடத்த முடிவு செய்திருந்தனர். சாவது என்று முடிவு செய்திருந்தால் திருமண ஏற்பாடுகளை அவர்கள் ஏன் செய்தனர். எனவே இந்த 11 பேர் தற்கொலை திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலையா அல்லது தூண்டிவிடப்பட்ட தற்கொலையா என போலீஸார் விசாரணை நடத்துகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+