ஆளுநர் நினைத்தால் தான் எல்லாமே நடக்கும்.. அப்போ ஜம்மு காஷ்மீர் அரசின் அதிகாரங்கள் தான் என்ன?
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் இப்போது சட்டசபைத் தேர்தல் நடக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் அங்கு நடக்கும் முதல் சட்டசபைத் தேர்தலாகும். இப்போது அமையப் போகும் யூனியன் பிரதேச அரசுக்கு முன்பு அங்கு இருந்ததை போல அதிக அதிகாரம் இருக்காது. கவர்னருக்கே கூடுதல் அதிகாரங்கள் இருக்கும். இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்.
காஷ்மீரில் முதற்கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், இன்னும் இரண்டு கட்ட தேர்தல் பாக்கி உள்ளது. 2014 ஜம்மு காஷ்மீர் மாநிலமாக இருந்த போது தேர்தல் நடந்தது. அதன் பிறகு இப்போது தான் அங்குச் சட்டசபைத் தேர்தல் நடந்துள்ளது.

அதிகாரம்: ஆனால், 2014இல் அமைந்த அரசுக்கும் இப்போது அமையப் போகும் அரசுக்கும் பல வேறுபாடுகள் உள்ளன. ஏனென்றால் 2014ல் அமைந்தது மாநில அரசு, ஆனால் இப்போது அமையப் போவது யூனியன் பிரதேசத்திற்கான அரசு. இந்த அரசுக்கு என்ன அதிகாரம் உள்ளது. இரண்டிற்கும் இடையே உள்ள வேறுபாடு என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
கடந்த 2019இல் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட போது ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநில அந்தஸ்து நீக்கப்பட்டு இரண்டு யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்பட்டன. சட்டமன்றம் இல்லாத யூனியன் பிரதேசமாக லடாக் இருக்கும் என்றும் சட்டசபையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக ஜம்மு காஷ்மீர் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதற்காக அரசியலமைப்பின் 3வது பிரிவில் தேவையான சட்டத் திருத்தமும் மேற்கொள்ளப்பட்டது.
அதிகாரம் குறைவு: நமது நாட்டில் பல யூனியன் பிரதேசங்கள் இருந்தாலும் கூட டெல்லி, புதுச்சேரி மற்றும் ஜம்மு மட்டுமே சட்டசபையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக உள்ளது. அதில் புதுச்சேரிக்கு இருக்கும் அதிகாரங்களைப் போலவே காஷ்மீருக்கும் இருக்கும். அரசியலமைப்பின் 239A பிரிவில் சட்டங்கள் புதுவையைப் போலவே காஷ்மீருக்கும் பொருந்தும் என்று 2019இன் மாநில பவர்களை விளக்கும் சட்டம் கூறுகிறது. அதேநேரம் டெல்லி மாநில அரசுக்கு அதிகாரங்கள் சற்று குறைவாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது.
காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து இருந்த வரை பாதுகாப்பு, வெளியுறவு மற்றும் தகவல் தொடர்பு துறைகளில் மட்டுமே இந்தியாவின் அதிகாரம் காஷ்மீரில் செல்லுபடியாகும் என்பது போல இருந்தது. ஆனால், சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதால் இப்போது நாட்டின் பிற யூனியன் பிரதேசங்களைப் போலவே காஷ்மீரிலும் மத்திய அரசின் அதிகாரம் நீண்டுள்ளது.
ஆளுநருக்குக் கூடுதல் பவர்: காஷ்மீருக்காக 2019ல் இயற்றப்பட்ட மறுசீரமைப்பு சட்டம் துணை நிலை ஆளுநருக்கு அதிக அதிகாரத்தைக் கொடுக்கிறது. அங்கு அமையும் மாநில அரசுக்கான அதிகாரம் குறைவாகவே உள்ளது. சட்ட ஒழுங்கு, போலீஸ் தவிர வேறு எது சார்ந்த சட்டத்தையும் காஷ்மீர் சட்டசபையால் நிறைவேற்ற முடியாது. அதேபோல பொது பட்டியலில் உள்ள விஷயங்கள் குறித்தும் காஷ்மீர் அரசால் சட்டத்தை இயற்ற முடியாது.
ஆளுநர் ஒப்புதல் தேவை: நமது நாட்டில் மற்ற மாநிலங்களில் மத்திய சட்டங்களுடன் முரண்படவில்லை என்றால் மாநில அரசுகளால் பொது பட்டியலில் இருக்கும் துறைகள் குறித்த சட்டங்களை உருவாக்க முடியும். ஆனால், காஷ்மீருக்கு இதில் கூடுதல் கண்டிஷன்கள் உள்ளன. அதாவது காஷ்மீரில் எந்தவொரு நிதி மசோதா அல்லது திருத்தங்களை அறிமுகப்படுத்தும் முன்பு லெப்டினன்ட் கவர்னரின் பரிந்துரை தேவை என்று சட்டம் கூறுகிறது. அதாவது எந்த சட்டம் என்றாலும் ஆளுநரின் ஒப்புதல் தேவை என்ற சூழலை உருவாக்குகிறது.
மேலும், ஆல் இந்தியா சர்வீஸ், ஊழல் விசாரணை முகமைகள் என அனைத்தும் கவர்னர் கட்டுப்பாட்டில் தான் இருக்கும். இது ஆளுநருக்கு அதிகபட்ச அதிகாரங்களைத் தருவதாக இருக்கிறது. மாநில அரசின் அதிகாரத்தை வெகுவாக குறைக்கிறது. ஆனால், முன்பு மாநிலமாக இருந்த போது மாநில அரசுக்கே அதிகபட்ச அதிகாரம் இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications