For Daily Alerts
Just In
என்னை கட்டிப்பிடிங்க மும்பைவாசிகளே: பரபரப்பை ஏற்படுத்திய இஸ்லாமியர்
மும்பை: மும்பையில் இஸ்லாமியர் ஒருவர் தெருவோரம் நின்று தனது கண்ணில் துணியை கட்டிக் கொண்டு அந்த வழியாக செல்பவர்களிடம் தன்னை கட்டிப்பிடிக்குமாறு தெரிவித்துள்ளார்.
மும்பையில் உள்ள சவ்பதி பகுதியில் மாசிம் மில்லா என்ற இஸ்லாமியர் தனது கண்ணில் துணியைக் கட்டிக் கொண்டு சாலையோரம் நின்றார். அவர் அருகே இருந்த பலகையில் எழுதியிருந்ததாவது,
நான் ஒரு முஸ்லீம். நான் உங்களை நம்புகிறேன். நீங்கள் என்னை நம்புகிறீர்களா? நம்பினால் கட்டிப்பிடியுங்கள் என்று எழுதப்பட்டிருந்தது.
அவர் பிறர் தன்னை கட்டிப்பிடிக்க வசதியாக இரு கைகைகளையும் நீட்டியபடி நின்றார். அவரை பார்த்த பலர் சிரித்துவிட்டு சென்றனர், சிலர் புகைப்படம் எடுத்தனர். பெண்கள் உள்பட சிலர் அவரை கட்டிப்பிடித்து கை கொடுத்தனர்.
மக்கள் என்ன செய்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள மில்லா இவ்வாறு செய்துள்ளார்.
Comments
English summary
A blindfolded muslim man in Mumbai asked strangers who walked past him to hug him.
Story first published: Monday, August 10, 2015, 10:23 [IST]