120 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டம்.. அயோத்தி ராமர் கோவில் கட்டுமானம் நிறைவடைவது எப்போது தெரியுமா?
அயோத்தி: அயோத்தியில் கட்டப்படவுள்ள பிரமாண்டமான ராமர் கோயிலுக்கு பூமி பூஜை ஏற்பாடுகள் நிறைவடைந்துள்ளன. பூமி பூஜைக்கு இன்னும் ஒரு சில மணிநேரங்களே உள்ளது.
அயோத்தியில் எல்லா இடங்களிலும் தீபாவளி போன்ற மனநிலை காணப்படுகிறது. பூமி பூஜைக்காக அங்குள்ள மக்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். அயோத்தி முழுவதும் ஒளிர்கிறது.
Recommended Video
இந்த நேரத்தில் பிரதமர் நரேந்திர மோடி உட்பட பல விவிஐபிகள் விழாவில் கலந்து கொள்வார்கள். ஆனால் இப்போது அனைவரின் மனதிலும் உள்ள கேள்வி என்னவென்றால், இந்த பூமி பூஜைக்குப் பிறகு, இந்த மாபெரும் ராமர் கோயில் உருவாக எவ்வளவு காலம் தேவைப்படும் என்பதுதான்.

பெரிய கோவில்
120 ஏக்கர் பரப்பளவில் உலகிலேயே மூன்றாவது பெரிய கோவிலாக அயோத்தி ராமர் கோவில் உருவாகுகிறது. கோவிலை கட்டி முடிக்க ரூ.300 கோடி செலவாகும் என்றும், மேலும், கூடுதலாக, 20 ஏக்கர் பரப்பளவில் தேவையான வசதிகளை உருவாக்க ரூ.1000 கோடி வரையில் செலவாகும் என்றும் தெரிகிறது.

பேட்டி
கோவில் எப்போது கட்டி முடிக்கப்படும் என்பது குறித்து, ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த அறக்கட்டளையின் அறங்காவலர் சுவாமி பரமானந்த் மகாராஜ் ஒரு செய்தி நிறுவனத்துடன் பேசியுள்ளார். அவர் கூறியதாவது: அயோத்தியில் உள்ள கர்சேவக்புரத்தில் உள்ள பட்டறையில் தயாரிக்கப்பட்ட கற்கள் ராம் கோயில் கட்டுமானத்தில் பயன்படுத்தப்படும்.

செங்கற்கள்
இந்த கற்கள் தவிர, அயோத்தியின் கர்சேவக்புரத்தில் வைக்கப்பட்டுள்ள செங்கற்கள் கோவில் கட்ட பயன்படுத்தப்படும். ராமர் கோவிலை கட்ட வேண்டும் என்பதற்காக, நாடு முழுக்க இருந்த கடந்த 30 வருடங்களாக அனுப்பப்பட்ட செங்கல்கள் இவை. இதில் பல்வேறு மொழிகளில் (தமிழ், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட) ஸ்ரீராம் என்று பெயர் செதுக்கப்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்களால் அனுப்பப்பட்ட அந்த செங்கல்கள் பயபக்தியுடன் இங்கு பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. இந்த செங்கற்களுக்கு சிறப்பு பூஜை செய்யப்படும். பிறகு கோவில் கட்டுமானத்தில் பயன்படுத்தப்படும்.

கோவில் நடை திறப்பு
பூமி பூஜை ஆகஸ்ட் 5ம் தேதியான இன்று நடைபெறும் நிலையில், 2023ம் ஆண்டு, ராம் நவமியின் போது (மார்ச் மாதம்), கோயிலின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து பக்தர்களின் வழிபாட்டுக்கு கோவில் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம். குழந்தை ராமர் உருவச் சிலையை, பக்தர்கள் தரிசனம் செய்ய முடியும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications