'சவுண்டு சரோஜா' குத்து ரம்யா ஏன் காவிரி போராட்டத்தில் குதிக்கவில்லை தெரியுமா? #TNNeedsKaveri
பெங்களூரு: பாகிஸ்தானை புகழ்ந்து சர்ச்சையில் சிக்கிய நடிகை குத்து ரம்யா காவிரி விவகாரத்தில் மற்ற நடிகர், நடிகைகளைப் போல வீதியில் இறங்கி போராட வரவில்லை.
காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யாக இருந்தவர் குத்து ரம்யா. கடந்த லோக்சபா தேர்தலில் அவர் தோல்வியைத் தழுவினார்.
அண்மையில் பாகிஸ்தானை ரொம்ப பிடிக்கும் என பேசி தேசதுரோக வழக்குகளை வாங்கியவர். பின்னர் இலங்கையையும் பிடிக்கும் என கூறி சர்ச்சையில் சிக்கினார்.
இந்த நிலையில் கன்னட திரையுலகம் இன்று முழு அடைப்புக்கு ஆதரவாக வீதியில் இறங்கிப் போராடிக் கொண்டிருக்கிறது. ஆனால் நடிகை குத்து ரம்யா இதில் கலந்து கொள்ளவில்லை.
Pictures that I just received from farmers in Mandya who are sowing after water being released to the canals. pic.twitter.com/3uPEm8RLMK
— Divya Spandana/Ramya (@divyaspandana) September 9, 2016
கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு நடைபெறுவதால் குத்து ரம்யா கலந்து கொள்ளாமல் இருந்திருக்கலாம். இது குறித்து தம்முடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள குத்து ரம்யா, விவசாயிகளுக்கு எப்போதும் என்னுடைய ஆதரவு உண்டு... வீதியில் இறங்கி போராடுவதற்கும் அப்பால் நிரந்தரத் தீர்வு அவசியம் என குறிப்பிட்டிருக்கிறார்.
My work involves making sure our farmers have water for irrigation@CMofKarnataka has already released water for this https://t.co/G4nSuNHtP4
— Divya Spandana/Ramya (@divyaspandana) September 9, 2016
பின்னர் மாண்டியா விவசாயிகளுக்கு காவிரி நீர் கிடைத்துவிட்டது; காவிரி நீர் திறந்துவிட்ட முதல்வர் சித்தராமையாவுக்கு நன்றி என போட்டதுடன் மாண்டியா விவசாயிகளின் வேளாண் பணிகள் என படங்களையும் போட்டிருக்கிறார்.