ஒடிசா மாநில முதல்வராக மோகன் மாஜி தேர்வு.. பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முடிவு
புவனேஸ்வர்: ஒடிசாவில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதாதளம் கட்சியை வீழ்த்தி பாஜக ஆட்சியை பிடித்துள்ளது. இந்நிலையில் தான் அம்மாநில புதிய முதல்வரை தேர்வு செய்வதற்காக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் ஒடிசா மாநில முதல்வராக மோகன் மாஜி தேர்வு செய்யப்பட்டார்.
ஒடிசாவில் கடந்த 24 ஆண்டுகளாக முதல்வராக இருந்து வருபவர் பிஜு ஜனதாதளம் கட்சியின் தலைவர் நவீன் பட்நாயக். கடந்த 5 சட்டசபை தேர்தல்களில் அவரது கட்சி தொடர்ந்து வென்றது. இதனால் ஒடிசாவில் அசைக்க முடியாத முதல்வராக நவீன் பட்நாயக் நீடித்து வந்தார்.

இந்நிலையில் தான் சமீபத்தில் லோக்சபா தேர்தலுடன் ஒடிசாவுக்கு சட்டசபை தேர்தல் நடந்தது. இந்த மாநிலத்தில் மொத்தம் 147 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு ஒரு கட்சி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 74 தொகுதிகளில் வெல்ல வேண்டும்.
இந்த தேர்தலில் பாஜக தனிபெரும்பான்மை பெற்றது. அதாவது பாஜக 78 இடங்களை கைப்பற்றியது. நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதாததளம் 51 இடங்களில் ஜெயித்தது. காங்கிரஸ் 14 தொகுதிகளிலும், சுயேச்சைகள் 3 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு இடத்திலும் வென்றது.
இதன்மூலம் 24 ஆண்டு பிஜு ஜனதாதளம் கட்சியின் ஆட்சி முடிவுக்கு வந்தது. அதோடு ஒடிசாவில் ஆட்சி மாற்றம் நடந்துள்ளது. சட்டசபைத் தேர்தல் தோல்வியால் முதல்வர் பதவியை நவீன் பட்நாயக் ராஜினாமா செய்துள்ளார். மேலும் பாஜக தலைமையிலான ஆட்சி அமைய உள்ளது. இந்நிலையில் தான் ஒடிசாவின் புதிய முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்தது.
இதற்கிடையே தான் இன்று ஒடிசாவின் புதிய முதல்வராக மோகன் மாஜி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதாவது இன்று பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது.. இந்த கூட்டத்தில் எம்எல்ஏக்கள் சேர்ந்து தான் மோகன் மாஜியை புதிய முதல்வராகத் தேர்வு செய்தனர். அவர் நாளை மாலை ஒடிசா மாநில முதல்வராகப் பதவியேற்பார் எனத் தெரிகிறது.
ஒடிசாவின் புதிய முதல்வர் ரேஸில் தர்மேந்திர பிரதான் முன்னிலையில் இருந்தார். ஆனால் எம்பியாக உள்ள அவர் பிரதமர் மோடியின் அமைச்சரவையில் கல்வித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். இதனால் அவருக்குப் பதிலாக இன்னொருவரை ஒடிசாவின் முதல்வராகத் தேர்வு செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது. முதல்வருக்கான ரேஸில் கேபி சிங் டியோ, மோகன் மாஜி ராபி நராயணன் நாயக், சுராமா பாதி, ஜெனரல் கிரிஷ் சந்திர முர்மு ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவியது.
இறுதியில் மோகன் மாஜி ஒடிசா மாநில முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டார்.. இவர் ஒடிசாவின் பழங்குடியின மக்களின் வாய்ஸாக பார்க்கப்படுகிறார். இவர் 4வது முறையாக எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேபோல அம்மாநில துணை முதல்வர்களாக கனக் வர்தன் சிங் தியோ மற்றும் பிரவதி பரிதா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications