தேசிய ஜனநாயக கூட்டணி குடியரசு தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் சாதனை இதுதான்!
டெல்லி: குடியரசு தலைவர் தேர்தல் இன்று நடைபெறுகிறது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ராம்நாத் கோவிந்த், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் மீரா குமார் போட்டியிடுகிறார்கள்.
ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் ராம்நாத் கோவிந்த் வாழ்க்கை குறிப்பு இதோ:

1945ம் ஆண்டு அக்டோபர் மாதம் 1ம் தேதி உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டம், தேராபூர் தாலுகா பராங்க் என்ற கிராமத்தில் பிறந்தவர் ராம்நாத் கோவிந்த்.
தலித் குடும்பத்தில் பிறந்த ராம்நாத் கோவிந்த், தனது பள்ளி, கல்லூரி நாட்களிலேயே பிற்படுத்தப்பட்டோர், தலித் மற்றும் பழங்குடியினர் உரிமைகளுக்காக குரல் கொடுத்து பல போராட்டங்களில் ஈடுபட்டார்.
ராம்நாத் கோவிந்துக்கு நலிவடைந்தோரின் பாதுகாவலர் என்ற அடைமொழி அப்போதே ஏற்பட அவரின் போராட்டங்கள் காரணம்.
கான்பூர் பல்கலைக்கழகத்தில் பி.காம். படித்தார். பின்னர் அதே பல்கலைக்கழகத்தில், வழக்கறிஞருக்கான, எல்.எல்.பி. பட்டமும் பெற்றார். 1971ல் டெல்லி பார் கவுன்சிலில் வக்கீலாக பதிவு செய்தார். சிவில் சர்வீசஸ் தேர்வில் 2 முறை தோல்வி கண்டு 3வது முறையாக தேர்ச்சி பெற்றார்.
1977ம் ஆண்டு முதல் 1979ம் ஆண்டு வரை டெல்லி ஹைகோர்ட்டில் வழக்கறிஞராக பணியாற்றினார். இதைத் தொடர்ந்து 1980ம் ஆண்டு முதல் 1993ம் ஆண்டு வரை மத்திய அரசின் வக்கீலாக சுப்ரீம் கோர்ட்டில் பணி புரிந்தார். தலித் மற்றும் பழங்குடியினர். நலனுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு, சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் நாடாளுமன்ற நிலைக்குழு உள்பட பல்வேறு நிலைக்குழுக்களில் உறுப்பினராக அவர் பணியாற்றி இருக்கிறார்.
லக்னோவில் உள்ள டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழக நிர்வாகத்தின் வாரிய உறுப்பினர், கொல்கத்தா ஐ.ஐ.எம். நிறுவனத்தில் அரசு நிர்வாக குழு உறுப்பினராகவும் அவர் பொறுப்பு வகித்துள்ளார்.
ராஜ்யசபாவுக்கு உத்தரபிரதேசத்தில் இருந்து தொடர்ச்சியாக 1994-2000, 2000-2006 ஆகிய இருமுறை தேர்ந்தெடுக்கப்பட்டு 12 ஆண்டுகள் எம்.பி.யாக பணியாற்றினார். பதவி காலத்தில் உத்தரபிரதேசம் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் கிராமப் புற கல்வி வளர்ச்சிக்கு அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக எம்.பி.க்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை முழுமையாக பயன்படுத்தி தீவிரமாக பாடுபட்டார்.
Recommended Video

தலித், பழங்குடியினர் வகுப்பில் நலிவடைந்தோர், பெண்களுக்கு டெல்லி இலவச சட்ட உதவி மையத்தின் மூலம் சட்ட உதவிகளையும், ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார். எம்.பி.யாக பதவி வகித்தபோது பாகிஸ்தான், அமெரிக்கா உட்பட பல நாடுகளுக்கு சென்று வந்துள்ளார்.
பாஜகவின் தலித் மோர்ச்சா அமைப்பின் தலைவராக 1998 முதல் 2002ம் ஆண்டு வரை பணியாற்றினார். இதேபோல் அகில இந்திய கோலி சமாஜ் தலைவராகவும் பதவி வகித்தார். ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர். பாஜக தேசிய செய்தி தொடர்பாளராக பதவி வகித்த அவர் 2015ம் ஆண்டு ஆகஸ்டு 8ம் தேதி பீகார் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
71 வயதாகும் ராம்நாத் கோவிந்த்தின் மனைவி பெயர் சவீதா. 1994ல்தான் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு பிரசாந்த் குமார் என்ற மகனும், சுவாதி என்ற மகளும் உள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications