கட்சியையே பறிகொடுக்கும் மம்தா? மே.வங்கத்தில் எதிர்க்கட்சி தலைவரான சஸ்பெண்ட் எம்எல்ஏ! ரிதப்ரதா பானர்ஜி யார்?

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் முதல்வராக இருந்த மம்தா பானர்ஜி தோல்வியடைந்தார். அதேபோல் அவரது கட்சியும் பாஜகவிடம் ஆட்சியை பறிகொடுத்தது. இந்நிலையில் தான் தற்போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்எல்ஏ ரிதப்ரதா பானர்ஜி 59 எம்எல்ஏக்களின் ஆதரவில் சட்டசபையின் எதிர்க்கட்சி தலைவராகி உள்ளார். இதனால் கட்சியின் கட்டுப்பாடு மம்தா பானர்ஜியிடம் இருந்து சென்று விடும் நிலை உள்ளது.

மேற்கு வங்கத்தில் கடந்த 2011, 2016, 2021 என 3 சட்டசபை தேர்தல்களில் வென்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி முதல்வராக இருந்தார். இந்நிலையில் தான் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் மம்தா பானர்ஜி மட்டுமின்றி அவரது கட்சி தோல்வியடைந்தது.

who-is-ritabrata-banerjee-how-he-gets-west-bengal-assembly-leader-of-opposition-details-here

மேற்கு வங்கத்தில் மொத்தம் 294 சட்டசபை தொகுதிகள் உள்ளன. மெஜாரிட்டிக்கு மொத்தம் 147 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். இதில் பாஜக அமோக வெற்றி பெற்றது. மொத்தம் 207 தொகுதிகளில் பாஜக வாகை சூடியது. முதல்வராக இருந்த மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 80 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் 2 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு இடத்திலும், மற்றவர்கள் 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்றனர்.

பவானிபூர் தொகுதியில் களமிறங்கிய மம்தா பானர்ஜி, பாஜகவின் சுவேந்து அதிகாரியிடம் தோல்வியடைந்தார். மம்தா பானர்ஜி 58,812 ஓட்டுகள் வாங்கிய நிலையில் சுவேந்து அதிகாரி 73,917 வாக்குகள் வாங்கி 15,105 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். இதையடுத்து பாஜக சார்பில் சுவேந்து அதிகாரி முதல்வரானார். இந்த தேர்தல் தோல்வியை தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது.

அதாவது மம்தா பானர்ஜி தேர்தலில் தோற்றதால் அவரது எம்எல்ஏ சோபாந்தீப் சதோபாத்யாவை எதிர்க்கட்சி தலைவராக்கவும், கட்சியின் கொறடாவாகவும் முடிவு செய்தார். மே 6ம் தேதி நடந்த எம்எல்ஏக்கள் மீட்டிங்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதற்கு கட்சிக்குள் எதிர்ப்பு கிளம்பியது. எம்எல்ஏக்களின் போலி கையெழுத்தில் எதிர்க்கட்சி தலைவர் தேர்வு செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த குற்றச்சாட்டை மம்தா பானர்ஜியின் கட்சியை சேர்ந்த ரிதப்ரதா பானர்ஜி தான் முன்வைத்தார். இதையடுத்து அவர் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இதையடுத்து கட்சி 2 ஆக பிளந்தது. மம்தா பானர்ஜி கட்சியை சேர்ந்த 80 எம்எல்ஏக்கள் 2 பிரிவாக பிரிந்துள்ளனர். மம்தா பானர்ஜிக்கு ஆதரவாக 21 எம்எல்ஏக்கள் உள்ள நிலையில் தனி அணியாக 59 எம்எல்ஏக்கள் செயல்பட்டு வருகின்றனர். இந்த அணிக்கு தலைமை வகித்து வருபவர் ரிதப்ரதா பானர்ஜி. இவர் தனக்கு ஆதரவாக உள்ள 58 எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை வழங்கி மேற்கு வங்க மாநில சட்டசபையின் எதிர்க்கட்சி தலைவர் பதவியை எட்டிப்பிடித்துள்ளார். அவருக்கு பாஜக சபாநாயகர் ரதீந்திர போஸ் அங்கீகரித்துள்ளார்.

சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவராகி உள்ள ரிதப்ரதா பானர்ஜியால் தற்போது மம்தா பானர்ஜிக்கு பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. பொதுவாக ஒரு கட்சியில் இருந்து எம்எல்ஏக்கள் தனி அணியாக பிரிந்து செல்லும்போது அவர்கள் மீது கட்சி தாவல் தடை சட்டத்தில் நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால் 3ல் 2 பங்கு எம்எல்ஏக்கள் தனி அணியாக பிரிந்தால் கட்சி தாவல் தடை சட்டத்தில் நடவடிக்கை எடுக்க முடியாது.

தற்போது சட்டசபையில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு 80 எம்எல்ஏக்கள் உள்ளன.இதில் 3ல் 2 பங்கு என்றால் 54 எம்எல்ஏக்கள் வரும். அப்படி பார்த்தால் தற்போது ரிதப்ரதா பானர்ஜியிடம் 58 எம்எல்ஏக்கள் உள்ளனர். அவரை சேர்த்தால் 59 எம்எல்ஏக்கள் ஆவார்கள். இதனால் கட்சி தாவல் தடை சட்டத்தில் மம்தா பானர்ஜியால் நடவடிக்கை எடுக்க முடியாமல் போகலாம். அதோடு நாங்கள் தான் உண்மையான திரிணாமுல் காங்கிரஸ் என்று உரிமை கோரினால் அதிகமான எம்எல்ஏக்கள் உள்ளதன் அடிப்படையில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியே திரதப்ரதா பானர்ஜி வசம் செல்லும் நிலை உள்ளது.

இப்படி மம்தா பானர்ஜிக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ள ரிதப்ரதா பானர்ஜிக்கு தற்போது 47 வயது தான் ஆகிறது. மேற்கு வங்கத்தின் உலுபேரியா பூர்பா சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு பாஜகவின் ருத்ர பிரசாத் பானர்ஜியை 95,633 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார். இவர் முதலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் செயல்பட்டார். ராஜ்யசபா எம்பியாக செயல்பட்டார். கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி அவர் 2017 ல் நீக்கப்பட்டார்.

அதன்பிறகு தான் அவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். குறுகிய காலத்தில் மம்தா பானர்ஜியின் நம்பிக்கையை பெற்ற அவர் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் 2024ல் ராஜ்யசபா எம்பியாக்கினார். ராஜ்யசபா எம்பியாக இருந்து கொண்டே சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற நிலையில் தற்போது மம்தா பானர்ஜிக்கு எதிராக எம்எல்ஏக்களை வழிநடத்தி மேற்குவங்க மாநில சட்டசபையின் எதிர்க்கட்சி தலைவராகி உள்ளார். இதனால் மேற்கு வங்க அரசியலில் மம்தா பானர்ஜிக்கு பெரிய சிக்கல் ஏற்பட்டது. சட்டசபை தேர்தலில் தோல்வியடைந்து எம்எல்ஏ, முதல்வர் பதவியை இழந்த அவர் தற்போது கட்சியையே பறிகொடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+