மோப்பம் பிடித்த.. "பாடி கேமராக்கள்".. இதயத்தை உலுக்கிய "ஆக்சல்".. மரணம்.. கண்ணீர்விட்ட ராணுவ வீரர்கள்
ஆக்சல் என்ற மோப்ப நாய்க்கு ராணுவ வீரர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்
லடாக்: காஷ்மீரில் பயங்கரவாதிகளுடனான என்கவுன்ட்டரின்போது ஆக்சல்' என்ற மோப்ப நாய் கொல்லப்பட்டது அதிர்ச்சியை கூட்டி வருவதுடன், அது தொடர்பான நெகிழ்ச்சி சம்பவம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
சில நாட்களாக ஒரு நெகிழ்ச்சி சம்பவம் இணையத்தில் வட்டமடித்து கொண்டிருக்கிறது.. ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையை பாதுகாப்புப் படையினர் தொடங்கினர்..
இதையடுத்து, கடுமையான துப்பாக்கி சண்டைகள் நடந்தன.. அப்போது, மோப்ப நாய் ஆக்சல் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளது.

ரகசிய தகவல்
பின்னர் நடத்தப்பட்ட என்கவுன்டரின்போது, ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டார், 3 பாதுகாப்புப் படையினர் காயமடைந்தனர்.. நேற்று முன்தினம் காலை, வாணிகம் என்ற கிராமத்தில் பாகிஸ்தானை சேர்ந்த 4 பயங்கரவாதிகள் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது.. அந்த தகவலின் அடிப்படையில் போலீசாரும், ராணுவமும் உடனே இணைந்து, அந்த என்கவுன்டரை ஆரம்பித்துள்ளனர்.

பாடி கேமராக்கள்
இந்த சமயத்தில்தான், பயங்கரவாதிகளின் நடமாட்டத்தை கண்காணிக்க, 2 ராணுவ நாய்கள் அனுப்பப்பட்டன.. அந்த நாய்களின் பெயர், பஜாஜ் மற்றும் ஆக்சல்.. இந்த நாய்களுக்கு, "பாடி கேமராக்கள்" அணிந்து பயங்கரவாதிகள் தங்கியிருந்த வீட்டிற்குள் அனுப்பப்பட்டன... பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தபோது, மறைந்திருந்த பயங்கரவாதிகள் ஆக்சலை நோக்கி திடீரென துப்பாக்கியால் சுட்டுவிட்டனர்.. 3 குண்டுகள் ஆக்சல் மீது பாய்ந்தது.

பரிதாப ஆக்செல்
ஆக்சல் அங்கேயே சுருண்டு உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து காவல்துறை அலுவலர் ஒருவர் சொல்லும்போது,"நாங்கள் பதட்டமடைந்து, கால்நடை டாக்டரிடம் கொண்டு செல்வதற்குள் ஆக்செல் இறந்துவிட்டது... பயங்கரவாதியின் பெயர் அக்தர் ஹுசைன் பட் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த என்கவுன்டர் கிட்டத்தட்ட ஐந்து மணி நேரமாக நீடித்தது" என்றார்.

போஸ்ட் மார்ட்டம்
போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில் தலையில் 3 குண்டுகள் பாய்ந்திருந்ததும், கால் பகுதியில் 10 இடங்களில் காயங்களும் மற்றும் சிராய்ப்புகளும் ஏற்பட்டு இருந்ததும் தெரிய வந்துள்ளது. ஆக்சலை பொறுத்தவரை நன்கு பயிற்றுவிக்கப்பட்ட தாக்குதல் நாய் ஆகும்.. ஒரு பயங்கரவாதியின் மறைவிடத்தை தெரிந்துக்கொண்டு, அவரை தாக்கி காயத்தை ஏற்படுத்தும் திறனையும் கொண்டிருக்கும் ஆக்சல்..

நெகிழ்ச்சி
ஆக்சல் மட்டும், பயங்கரவாதியை இன்னும் நெருங்கியிருந்தால், என்கவுன்டர் வெகு முன்னதாகவே முடிந்திருக்கும், ஆக்சலின் உயிரும் பறிபோயிருக்காது என்று வருத்தத்துடன் சொல்கிறார்கள் ராணுவ வீரர்கள். மோப்ப நாய் ஆக்சல் உயிரிழந்ததையடுத்து, இந்திய ராணுவ வீரர்கள் ஆக்சலுக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்... நேற்றைய தினம் ஆக்சலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.. இந்த நெகிழ்ச்சி வீடியோக்கள், போட்டோக்கள்தான் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications