Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மோப்பம் பிடித்த.. "பாடி கேமராக்கள்".. இதயத்தை உலுக்கிய "ஆக்சல்".. மரணம்.. கண்ணீர்விட்ட ராணுவ வீரர்கள்

ஆக்சல் என்ற மோப்ப நாய்க்கு ராணுவ வீரர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்

Subscribe to Oneindia Tamil

லடாக்: காஷ்மீரில் பயங்கரவாதிகளுடனான என்கவுன்ட்டரின்போது ஆக்சல்' என்ற மோப்ப நாய் கொல்லப்பட்டது அதிர்ச்சியை கூட்டி வருவதுடன், அது தொடர்பான நெகிழ்ச்சி சம்பவம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

சில நாட்களாக ஒரு நெகிழ்ச்சி சம்பவம் இணையத்தில் வட்டமடித்து கொண்டிருக்கிறது.. ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையை பாதுகாப்புப் படையினர் தொடங்கினர்..

இதையடுத்து, கடுமையான துப்பாக்கி சண்டைகள் நடந்தன.. அப்போது, மோப்ப நாய் ஆக்சல் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளது.

 ரகசிய தகவல்

ரகசிய தகவல்

பின்னர் நடத்தப்பட்ட என்கவுன்டரின்போது, ​​ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டார், 3 பாதுகாப்புப் படையினர் காயமடைந்தனர்.. நேற்று முன்தினம் காலை, வாணிகம் என்ற கிராமத்தில் பாகிஸ்தானை சேர்ந்த 4 பயங்கரவாதிகள் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது.. அந்த தகவலின் அடிப்படையில் போலீசாரும், ராணுவமும் உடனே இணைந்து, அந்த என்கவுன்டரை ஆரம்பித்துள்ளனர்.

 பாடி கேமராக்கள்

பாடி கேமராக்கள்

இந்த சமயத்தில்தான், பயங்கரவாதிகளின் நடமாட்டத்தை கண்காணிக்க, 2 ராணுவ நாய்கள் அனுப்பப்பட்டன.. அந்த நாய்களின் பெயர், பஜாஜ் மற்றும் ஆக்சல்.. இந்த நாய்களுக்கு, "பாடி கேமராக்கள்" அணிந்து பயங்கரவாதிகள் தங்கியிருந்த வீட்டிற்குள் அனுப்பப்பட்டன... பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தபோது, ​​மறைந்திருந்த பயங்கரவாதிகள் ஆக்சலை நோக்கி திடீரென துப்பாக்கியால் சுட்டுவிட்டனர்.. 3 குண்டுகள் ஆக்சல் மீது பாய்ந்தது.

 பரிதாப ஆக்செல்

பரிதாப ஆக்செல்

ஆக்சல் அங்கேயே சுருண்டு உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து காவல்துறை அலுவலர் ஒருவர் சொல்லும்போது,"நாங்கள் பதட்டமடைந்து, கால்நடை டாக்டரிடம் கொண்டு செல்வதற்குள் ஆக்செல் இறந்துவிட்டது... பயங்கரவாதியின் பெயர் அக்தர் ஹுசைன் பட் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த என்கவுன்டர் கிட்டத்தட்ட ஐந்து மணி நேரமாக நீடித்தது" என்றார்.

 போஸ்ட் மார்ட்டம்

போஸ்ட் மார்ட்டம்

போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில் தலையில் 3 குண்டுகள் பாய்ந்திருந்ததும், கால் பகுதியில் 10 இடங்களில் காயங்களும் மற்றும் சிராய்ப்புகளும் ஏற்பட்டு இருந்ததும் தெரிய வந்துள்ளது. ஆக்சலை பொறுத்தவரை நன்கு பயிற்றுவிக்கப்பட்ட தாக்குதல் நாய் ஆகும்.. ஒரு பயங்கரவாதியின் மறைவிடத்தை தெரிந்துக்கொண்டு, அவரை தாக்கி காயத்தை ஏற்படுத்தும் திறனையும் கொண்டிருக்கும் ஆக்சல்..

நெகிழ்ச்சி

நெகிழ்ச்சி

ஆக்சல் மட்டும், பயங்கரவாதியை இன்னும் நெருங்கியிருந்தால், என்கவுன்டர் வெகு முன்னதாகவே முடிந்திருக்கும், ஆக்சலின் உயிரும் பறிபோயிருக்காது என்று வருத்தத்துடன் சொல்கிறார்கள் ராணுவ வீரர்கள். மோப்ப நாய் ஆக்சல் உயிரிழந்ததையடுத்து, இந்திய ராணுவ வீரர்கள் ஆக்சலுக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்... நேற்றைய தினம் ஆக்சலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.. இந்த நெகிழ்ச்சி வீடியோக்கள், போட்டோக்கள்தான் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+