நினைத்தது ஒன்று.. நடந்தது இன்னொன்று! ஜார்கண்டில் பாஜக சிக்கி திணற காரணங்கள் இவைதான்..
ராஞ்சி: மோடி அலையில் பாஜக அமோக வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜார்கண்டில் அக்கட்சி திக்கி திணறிவருவதற்கு சில முக்கிய காரணங்கள் உள்ளன.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் அத்தனையுமே பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்றே தீர்க்கமாக அறிவித்தன. அதேபோல வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் பாஜகவுக்கு ஆதரவாகவே டிரெண்ட் இருந்தது. இருப்பினும் நேரமாக, ஆக பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட தொடங்கியது.

பல தொகுதிகளிலும் ஆளும் கட்சியான ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா பாஜகவுக்கு நல்ல போட்டியை கொடுத்துவருகிறது. அக்கட்சிக்கு எதிராக மக்கள் மத்தியில் எதிர்ப்பு அலை இருக்கும் என்ற எதிர்பார்ப்பு பொய்த்துப்போயுள்ளது.
பெர்மோ, சட்டார்புர், கோமியா மற்றும் ஜமா போன்ற தொகுதிகளில் பாஜக முன்னணியில் இருந்தாலும், சில ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் மட்டுமே அங்கும் முன்னிலை வகிக்கிறது.
உண்மையை சொல்ல வேண்டுமெனில் ஜேஎம்எம் முன்பைவிட இப்போதுதான் முன்னேறியுள்ளது. 2009ம் ஆண்டில் 18 எம்.எல்.ஏக்களை பெற்றிருந்த அக்கட்சி இப்போது தனது செல்வாக்கை அதிகரித்துள்ளது. 20 தொகுதிகளில் அக்கட்சி முன்னிலையிலுள்ளது.
மற்றொரு பக்கம், பாபுலால் மரான்டியின், ஜார்கண்ட் விகாஸ் மோர்ச்சா கட்சி குறிப்பிடத்தக்க இடங்களில் முன்னிலை பெற்றிருப்பதும் பாஜகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்த ஏஜேஎஸ்யூ கட்சி அடைந்துள்ள பின்னடைவும் பாஜகவை பாதித்துள்ளது.
அந்த கட்சியின் தலைவர் சுதேஷ் மக்டோ சில்லி தொகுதியில் தோற்றுள்ளார். இத்தொகுதியில் 15 வருடங்களாக அவரே எம்.எல்.ஏவாக இருந்த நிலையில் அவரின் தோல்வி முக்கியத்துவம் பெறுகிறது.
மேலும் ஆளும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா சென்டிமென்டாக நடத்திய பிரச்சாரமும் பாஜகவுக்கு பெரும் முட்டுக்கட்டையாக மாறிவிட்டது. அதாவது, பழங்குடியினரின் நில உரிமையை மோடி அரசு பறித்துவிடும் என்று பயமுறுத்தி ஜேஎம்எம் நடத்திய பிரச்சாரத்திற்கு கணிசமான வெற்றி கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. ஏனெனில் பழங்குடியினர் அதிகமுள்ள தொகுதிகளில் பாஜகவுக்கு பின்னடைவே ஏற்பட்டுள்ளது.
-
கடும் கோபத்தில் மோடி.. சென்னை ரோடுஷோ - பிரசாரமே வேண்டாம்.. பாஜக தலைகளை பந்தாட தயாராகும் மேலிடம் -
அண்ணாமலைக்கு 'கல்தா'.. எடப்பாடியின் செல்லப்பிள்ளைகளுக்கு 'சீட்' .. பாஜகவின் திடீர் முடிவு.. ஏன்? -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
புதுச்சேரியில் பிரதமர் மோடி ரோடுஷோ.. மலர்தூவி உற்சாக வரவேற்பு கொடுத்த மக்கள்.. -
ராதாபுரத்தில் தமிழிசை, மயிலாப்பூரில் அண்ணாமலை? பாஜக எடுக்கும் முடிவு.. கமலாலயத்தில் நடந்தது என்ன? -
"வேட்பாளர் இல்லை வெறும் பூத் ஏஜென்ட் தான்".. பாஜகவுக்கு அண்ணாமலை சொன்ன மெசேஜ்.. மேலிடத்துக்கு அடுத்த ஷாக் -
திருநெல்வேலி 35 வருட அடையாளம் சார்.. யார் இந்த நயினார் நாகேந்திரன்.. சாத்தூரில் மாஸ்டர் பிளான் -
மாமியாருக்கு பதில் மருமகள்.. வாரிசு அரசியல் பேசிவிட்டு இப்படியா? மொடக்குறிச்சி பாஜக வேட்பாளரின் பின்னணி -
செருப்பு போடாதவர்.. 75 வயதில் முதல்முறை எம்எல்ஏ.. யார் இந்த நாகர்கோவில் பாஜக வேட்பாளர் காந்தி? -
சர்ப்ரைஸ் வானதி சீனிவாசன்.. நோஸ் கட் அண்ணாமலை.. 2021 தேர்தல் பாஜக பிளாஷ்பேக் -
மிட்நைட்டில் 4%வாக்குப் பதிவு? 'ஆந்திரா' பாணியில் தேர்தல்? எச்சரித்த நிர்மலா கணவர் -
சென்னை Red zone.. நாளை சென்னைக்கு வரும் பிரதமர் மோடி.. டிரோன்களுக்கு தடை.. கடும் பாதுகாப்பு!












Click it and Unblock the Notifications