ஜெயலலிதா உயிரோடு இருந்த போதே எப்படி எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை நடத்தலாம்? சசிகலா புஷ்பா ஆவேசம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்ததாக அறிவிக்கும் முன்பே அதிமுக எம்எல்ஏக்கள் ஏன் கூடி முதல்வரை தேர்ந்தெடுத்தனர் என்று கேள்வி எழுப்பியுள்ளார் அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ராஜ்யசபா எம்.பி.சசிகலா புஷ்பா.

இதுகுறித்து சசிகலா புஷ்பா கூறுகையில், ஜெயலலிதாவின் மறைவு எனக்கு அரசியல் ரீதியாக பேரிழப்பாகும். என்னை அரசியலில் உருவாக்கிவிட்ட ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக, சென்றபோது போலீஸ் நடத்திய விதம் வேதனையளித்தது.

Why AIADMK mlas choose CM before Jayalalitha being declared death? Sasikala Pushba

ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்த சென்றபோது என்னை கீழே பிடித்து தள்ளினர். அத்தனை தடைகளையும் மீறி ன் தாயை தரிசித்துவிட்டு வந்தேன். ஜெயலலிதாவின் சிகிச்சை முறை குறித்தும் அவரோடு இருப்பவர்கள் குறித்தும் நான் ஆரம்பம் முதலே சந்தேகம் எழுப்பி வந்தேன். நாடாளுமன்றத்தில் "Save Our Amma" என்ற பதாகையை காண்பித்தேன். இருப்பினும் அவரை காப்பாற்ற முடியவில்லை.

டிசம்பர் 5ம் தேதி இரவு 11.30 மணியளவில், ஜெயலலிதா காலமானதாக அறிவிப்பு வெளியானது. ஆனால் அதற்கு முன்பாகவே அதிமுக எம்எல்ஏக்கள் கூடி, புதிய முதல்வரை தேர்ந்தெடுத்தனர். ஜெயலலிதா உயிர் பிரிவதற்கு முன்பாக முதல்வரை தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியம் ஏன்? இவ்வாறு சசிகலா புஷ்பா கேள்வி எழுப்பினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+