தொடர வேண்டுமா உன்னத வீரர்களின் உயிரிழப்புகள்? சிஆர்பிஎஃப் தலைவர் நியமனம்தான் எப்போது?
சிஆர்பிஎஃப் எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படைக்கு கடந்த 2 மாதங்களாக தலைமை இல்லாததால் எந்த முடிவையும் எடுக்க முடியாமல் இப்போது 26 வீரர்களை இழந்துவிட்டோம்.
டெல்லி: சிஆர்பிஎஃப் எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படைக்கு கடந்த 2 மாதங்களாக தலைவரை நியமிக்காததால் எந்த ஒரு முடிவுகளையும் எடுக்க முடியாமல் இப்போது 26 வீரர்களை இழந்துள்ளோம்.
சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா மாவட்டத்தில் 150-க்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு மறைந்திருந்த மாவோயிஸ்டுகள், நமது வீரர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர்.

இதில் தமிழக வீரர்கள் உள்பட 26 பேர் வீரமரணமடைந்தனர். இந்த பிரச்சினையை மேலோட்டமாக பார்த்தோமேயானால் மாவோயிஸ்டுகள் தாக்குதலில் வீரர்கள் இறந்திருப்பது மட்டுமே தெரியும். ஆனால் கூர்ந்து கவனித்தால் மட்டுமே உண்மை விளங்கும்.
எந்த ஒரு அமைப்பானாலும் தலைமை இல்லாமல் இயங்குவது இயலாத காரியம். அந்த வகையில் சிஆர்பிஎஃப் படைக்கு கடந்த 2 மாதங்கள் தலைவர் என்பவர் யாரும் நியமிக்கப்படவில்லை. மத்திய உள்துறை அமைச்சகமோ சிஆர்பிஎஃப் படைக்கு புதிய இயக்குநரை விரைவில் நியமிப்பதாக கூறுகிறது.
ஆனால் அதுகுறித்து அதிகாரப்பூர்வமான தகவல் ஏதும் இதுவரை வெளியிடப்படவில்லை என்று சிஆர்பிஎஃப் அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் சிஆர்பிஎஃப் படையை சேர்ந்த 40 வீரர்களை இதுவரை இழந்துவிட்டோம்.
இந்த படைக்கு தலைவராக இருந்த கே.துர்கா பிரசாத் ஓய்வு பெற்றதை அடுத்து தற்போது தகுதியான தலைவரை நியமிக்க மத்திய உள்துறை அமைச்சகம் ஆலோசனை இன்னமும் நடத்தி வருகிறது. சுதீர் லக்டாகி என்பவரை பொறுப்பு தலைவராக நியமித்துள்ளது.
தற்போதைய நிலையில் சிஆர்பிஎஃப் படைக்கு தலைவரை நியமிப்பதில் அலட்சியம் காட்டி வரும் மத்திய அரசால் இன்னும் எத்தனை வீரர்களை அந்த படை இழக்க போகிறது என்று தெரியவில்லை.
-
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications