காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் என்ன செஞ்சீங்க? மத்திய அரசுக்கு சுப்ரீம்கோர்ட் 'சுளீர்'
டெல்லி: காவிரி நதிநீர் தொடர்பான வழக்கில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு கால தாமதம் செய்தது ஏன் என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
காவிரி நடுவர்மன்ற தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு தாக்கல் செய்த வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. கர்நாடகா, கேரளா, தமிழகம் ஆகிய மாநிலங்கள் வழக்கில் வாதாடிவிட்ட நிலையில், மத்திய அரசின் வழக்கறிஞர் இன்று வாதம் முன் வைத்தார்.
இதனிடையே, காவிரி மேலாண்மை வாரியம் குறித்து முடிவெடுக்க மத்திய அரசுக்கே அதிகாரமுள்ளது, காவிரி நடுவர்மன்றம் ஆலோசனைமட்டும் வழங்கலாம் என்று மத்தியஅரசு வழக்கறிஞர் வாதம் முன் வைத்தார். இது தமிழக விவசாயிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக அரசு குற்றச்சாட்டு
வழக்கு வாதத்தின்போது, தமிழக அரசு வழக்கறிஞர் குறுக்கிட்டு, காவிரி விவகாரத்தில் சுமூக தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார்.

உச்சநீதிமன்றம் கண்டனம்
அதேபோல மத்திய அரசின் நடவடிக்கைக்கு சுப்ரீம் கோர்ட்டும் கண்டனம் தெரிவித்தது. 2013ல் காவிரி நடுவர்மன்ற தீர்ப்பு வெளியாகிவிட்டபோதிலும், இத்தனை ஆண்டுகளாக அதை செயல்படுத்தாமல் மத்திய அரசு கால தாமதம் செய்தது ஏன் என்று சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியது. இது தவறான அணுகுமுறை என்று கண்டனம் தெரிவித்தது உச்சநீதிமன்றம்.

விளக்கம் கேட்டோம்
இதையடுத்து, மத்திய அரசு சார்பில் பதிலளித்து வழக்கறிஞர் வாதாடினார். அவர் கூறுகையில், காவிரி நடுவர்மன்ற தீர்ப்பில் உள்ள சந்தேகங்களுக்கு விளக்கம் கோரிதான் காத்திருந்தோம் என்றார்.

தயாராக உள்ளோம்
மேலும், சுப்ரீம் கோர்ட் இந்த விவகாரத்தில் எந்த வகையான தீர்ப்பு வழங்கினாலும், அதை செயல்படுத்த மத்திய அரசு தயார் என்று மத்திய அரசின் வழக்கறிஞர் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்தார்.
-
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
மத்திய அரசின் முடிவால் திருப்பூருக்கு ஜாக்பாட் .. பின்னலாடை அதிபர்கள் குஷி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications