நெற்றியிலேயே "குறி" வைத்து சுட்ட மர்மநபர்கள்.. 2 தமிழர்கள் சுருண்டு விழுந்து பலி.. பரபர மியான்மர்
மியான்மரில் 2 தமிழர்கள் நெற்றியிலேயே சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை தந்துவருகிறது
இம்பால்: மணிப்பூரில் வசித்து வந்த தமிழா்கள் 2 பேர் மிக கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டனா்... 2 பேரின் நெற்றியிலும் குறி பார்த்து சுட்டுக் கொன்றுள்ளனர்.
மணிப்பூரில் மியான்மா் எல்லையையொட்டியுள்ளது மோரே என்ற நகரம்.. இங்கு வசித்து வந்தவர்கள் பி.மோகன், வயது 28 மற்றும் எம்.அய்யனாா் வயது 35.
இவர்கள் 2 பேருமே வம்சாவளி தமிழர்கள் ஆவர்.. இதில் மோகன் என்பவர் ஆட்டோ டிரைவராக இருந்தார்... அய்யனார், தான் வசிக்கும் பகுதியிலேயே சிறிய கடை ஒன்றை நடத்தி வந்தார்.

சுட்டுக் கொலை
இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை, இவா்கள் 2 பேரையும் மியான்மா் எல்லையில் உள்ள டாமு என்ற இடத்தில் யாரோ சுட்டுக் கொன்றுவிட்டனர்.. அந்த பகுதியில் உள்ளவர்கள் இவர்களின் சடலங்களை கண்டு அலறி அடித்து ஓடி, போலீசுக்கும் தகவல் தந்தனர்.. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, 2 பேரின் சடலங்களையும் கைப்பற்றி, அங்குள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்..

தமிழர்கள் கொலை
இதுகுறித்து மோரேயில் உள்ள தமிழ்ச் சங்கத்தினா் சொல்லும்போது, "தமிழா்கள் இருவரையும் உளவாளிகள் என்று நினைத்து மியான்மா் ராணுவத்தினா் சுட்டுக் கொன்றிருக்கலாம்" என்றனர்.. மியான்மரை பொறுத்தவரை, ராணுவம் ஆட்சியை கைப்பற்றியுள்ளது.. இதைத்தொடா்ந்து, அந்த நாட்டுடனான சா்வதேச எல்லை மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களின்படி மூடப்பட்டிருக்கிறது.. இருந்தாலும், வா்த்தக தேவைகளுக்காக இரு நாட்டு மக்களும் எல்லைகளைக் கடந்து வந்து செல்வது வழக்கம்..

மியான்மர்
அந்த வகையில், கொல்லப்பட்ட தமிழர்களும் அந்த வழியாக சென்றிருக்கலாம் என்றும் தமிழ்ச் சங்கத்தினா் கூறுகிறார்கள்.. ஆனால், போலீஸ் தரப்பிலோ வேறு விதமாக சொல்லப்படுகிறது.. இவர்கள் சுட்டுக் கொல்லப்படுவதற்கு முன்பு, 2 பேரையும் காணவில்லை என்று காவல்துறையில் இரு தரப்பினர் சார்பாக புகார் தரப்பட்டிருந்ததாம்.. இவர்களை மியான்மர் பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் கொன்றுள்ளதாக போலீசார் சொல்கிறார்கள்..

நெற்றியிலேயே சுட்டனர்
சம்பந்தப்பட்ட பயங்கரவாதிகள் பைக்கில் வந்துள்ளனர்.. 2 தமிழர்களின் நெற்றியை குறி பார்த்தும் சுட்டுக் கொன்றுள்ளனர் என்கிறார்கள்.. எனினும், இவர்கள் இருவரும் எதற்காக மியான்மா் எல்லைக்குள் சென்றாா்கள் என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக மணிப்பூா் போலீஸாா் தெரிவித்துள்ளனர்.. இதனிடையே, கொலையாளிகளை கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, கடைகளை அடைத்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications