சேலம் 8 வழிச் சாலை .. சுற்றுச்சூழல் குறித்து பேசினாலே குற்றமா?.. கமல் கேள்வி
சேலம் - சென்னை இடையே சாலை போடும் விவகாரத்தில் சுற்றுச்சூழலை பற்றி பேசினாலே குற்றம் என்பதை ஏற்க முடியாது என்று கமல்ஹாசன் டெல்லியில் பேட்டியளித்துள்ளார்.
Recommended Video

டெல்லி: சேலம் - சென்னை இடையே சாலை போடும் விவகாரத்தில் சுற்றுச்சூழலை பற்றி பேசினாலே குற்றம் என்பதை ஏற்க முடியாது என்று கமல்ஹாசன் டெல்லியில் பேட்டியளித்துள்ளார்.
சேலம் - சென்னை இடையே போடப்பட உள்ள 8 வழி சாலை பெரிய அளவில் பிரச்சனையை உருவாக்கி உள்ளது. நிறைய மரங்கள் வெட்டப்படுவதும், விவசாய நிலங்கள் அபகரிக்கப்படுவதும் மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த திட்டத்திற்கு எதிராக போராடும் மக்கள், சமூக செயற்பாட்டளர்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.

இதுகுறித்து தற்போது கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார். அதில், சுற்றுச்சூழலை பற்றி பேசினாலே குற்றம் என்பதை ஏற்க முடியாது. மக்களை எல்லா விஷயத்திற்கும் கைது செய்கிறார்கள். சுற்றுசூழல் பிரச்சனை பற்றி பேசினாலே கைது செய்து வருகிறார்கள்.
கூடிய விரைவில் கட்சிக்கு அங்கீகாரம் கிடைக்கும். சின்னம் குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இதில் விரைவில் ஒரு தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறேன்.












Click it and Unblock the Notifications