பாகிஸ்தானை பயங்கரவாத நாடாக அறிவிக்கும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கத் தயங்குவது ஏன்?
பாகிஸ்தானை பயங்கரவாத நாடாக அறிவிக்கக் கோரும் தனி நபர் மசோதாவை ஆதரித்தால் ராஜ்ய உறவுகளில் விரிசல் ஏற்படலாம் என்று இந்தியா கருதுகிறது.
டெல்லி: பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளை பயங்கரவாத நாடாக அறிவிக்க வேண்டும் என்ற தனிநபர் மசோதாவை இந்திய அரசு எதிர்க்கப் போவதாக உள்துறை அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பயங்கரவாத எதிர்ப்பு என்பது சர்வதேச அளவில் பெரும் சவாலாகவே உள்ளது. இந்நிலையில் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளை தனிமைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலுப்படுத்தப்பட்டன.
இந்நிலையில் கர்நாடகத்தைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் ராஜீவ் சந்திரசேகர் பிப். 3-ஆம் தேதி பாராளுமன்றத்தில் தனிநபர் மசோதாவை கொண்டு வந்தார்.

பொருளாதார தடை
அதில் அவர் குறிப்பிடுகையில், பயங்கரவாதத்தை வேரறுக்காத பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் மீது பொருளாதாரத் தடையும், அந்நாடுகளைச் சேர்ந்த மக்கள் மீது போக்குவரத்துத் தடையும் விதிக்க வேண்டும். அதோடு அந்நாடுகளை பயங்கரவாத நாடுகளாக அறிவிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். பாராளுமன்றக் கூட்டத் தொடர் தொடங்கியதும் இந்த மசோதாவானது வரும் மார்ச் மாதம் 9-ஆம் தேதி விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

ஜெனீவா ஒப்பந்தம்
இந்நிலையில் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகளான பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் மீது பொருளாதாரத் தடை விதித்தால் அது ஜெனீவா மாநாட்டு ஒப்பந்தத்தின் படி உள்ள ராஜ்ய உறவுகளை பாதிக்கும் என்று இந்திய அரசு கருதுகிறது. எனவே அதுகுறித்து மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க உள்ளதாக உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வர்த்தக உறவு
இதுகுறித்து அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கையில், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுடன் இந்தியா வர்த்தகம் மேற்கொண்டுள்ளது. எனவே பாகிஸ்தான் மீது பொருளாதாரத் தடை விதிப்பது சரியன்று என்று தெரிவிக்கின்றன.

சட்டம் தேவையா?
அந்த மசோதாவை பாராளுமன்ற அவைக் குழுவினர் பரிந்துரைத்தால் அது சட்டமாக இயற்றப்படும். பின்னர் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு அதன் மீது வாக்கெடுப்பு நடத்தப்படும். ஒரு வேளை அதிகளவிலான உறுப்பினர்கள் ஆதரித்தால் அந்த மசோதா சட்டமாக உருவெடுக்கும்.
-
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்!












Click it and Unblock the Notifications