ஜே.என்.யூ மாணவர்கள் மகிஷாசுரனை வழிபட்டு, மாட்டுக்கறி சாப்பிட்ட 'தேசத்துரோகிகள்': போலீஸ்
டெல்லி: ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் மாட்டுக்கறி சாப்பிட்டதாகவும், துர்க்கையம்மனுக்கு பதிலாக மகிஷாசுரனை வழிபட்டதாகவும், இந்து கடவுள்களை ஆபாசமாக சித்தரித்ததாகவும் இந்த நடவடிக்கைகளின் உள்நோக்கத்தை வைத்து பார்க்கும்போது, அவர்கள் 'தேச விரோதிகள்' என்று டெல்லி போலீஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 9ம் தேதி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் ஜனநாயக மாணவர் சங்கம் சார்பில் நடைபெற்ற அப்சல் குருவிற்கு ஆதரவான நிகழ்ச்சி குறித்து டெல்லி காவல்துறை அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

அதில் 2015ம் ஆண்டு அக்டோபர் 16ல் டெல்லி போலீஸின் சிறப்புப் பிரிவு ஜே.என்.யூ. துணைவேந்தர் எஸ்.கே.சோப்ராயை சந்தித்துள்ளது. இந்த சந்திப்பின் போது பல்வேறு விவகாரங்கள் விவாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பல்கலைக்கழக வளாகத்தில் சிசிடிவி கேமரா பொருத்துவது பிரதானமாக விவாதிக்கபப்ட்டது.
மேலும், வளாகத்தினுள் மாணவர்கள் அடிக்கடி ஆர்பாட்டத்திலும் கோஷங்களிலும் ஈடுபடுவதும் விவாதிக்கப்பட்டது.
ஜனநாயக மாணவர் சங்கம், ஜனநாயக மாணவர் கூட்டமைப்பு என்ற இரண்டு அமைப்புகள் தேச விரோத மற்றும் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறது.
சில சமயங்களில் இந்த அமைப்பினர் இந்துக் கடவுளர்களின் நிர்வாண படத்தை சுவர்களில் ஒட்டி உணர்வுகளைப் புண்படுத்தியுள்ளனர். அப்சல் குருவுக்கு துக்கம் அனுசரித்ததோடு, தாண்டேவாடாவில் இந்திய துணை ராணுவப்படையினர் பலியானதை கொண்டாடியுள்ளனர்.
துர்க்கைக்கு பதிலாக மகிஷாசுரனை கும்பிட்டு பிற இந்து மாணவர்களை சீண்டியுள்ளனர். மாட்டுக்கறி சாப்பிட்டுள்ளனர். சர்ச்சைக்குறிய எஸ்.ஏ.ஆர்.கிலானியை உரையாற்ற அழைத்துள்ளனர். இவ்வாறு டெல்லி போலீஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications