ஜாதியை பெயருடன் பயன்படுத்த கூசும் தமிழகம்.. பகிரங்க ஜாதி அரசியல் செய்யும் கர்நாடகா.. காரணம் இதுதான்!
பெங்களூர்: தமிழகத்தில் ஜாதி பெயரை வெளியே சொல்வது நாகரீக சமூகத்திற்கு ஏற்ற செயல் அல்ல எனும் சூழல் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், கர்நாடகாவில் ஜாதி என்பது வெளிப்படையாகவே அரசியல் அஸ்திரமாக பயன்படுகிறது. அங்கே ஜாதி பெயரை பின்னால் சேர்த்துக்கொள்வது இன்னும் கவுரவமாக உள்ளது.
ஜாதி ஏற்றத்தாழ்வுகளை களைவதற்காக ஜாதியற்ற சமூகத்தை உருவாக்க தந்தை பெரியார் போன்ற சமூக போராளிகள், ஜாதி மற்றும் அதை கட்டமைக்கும் வைதீகங்களுக்கு எதிராக பெரும் போராட்டங்களை முன்னெடுத்தனர்.
கடவுளை மற, மனிதனை நினை என்று பெரியார் கூறினார். ஜாதி பெயரை பின்னால் சேர்ப்பது இழிவு என நினைக்கும் நிலைக்கு இன்று தமிழகம் முன்னேறியுள்ளதற்கு காரணம் இதுபோன்ற ஜாதி ஒழிப்பு விழிப்புணர்வுகள்தான்.

ஜாதி பற்று குறையும்
என்னதான் தனது ஜாதி மீது சிலருக்கு வெறி இருந்தாலும் அதை வெளியே காட்டிவிட முடியாத அளவுக்கு ஒரு சூழல் இருக்கம் தமிழகத்தில் எழுப்பப்பட்டுவிட்டது. நாளடைவில் ஜாதி மீதான பற்றுதல் குறைய இது வழிவகுக்கும் என நம்பலாம். ஆனால் பெரியாரின் ஈரோடு மண்ணுக்கு கொஞ்சம் கி.மீ தூரத்திலுள்ள கர்நாடக எல்லையில் ஆரம்பிக்கிறது, ஜாதியின் வாசம். தேவகவுடாக்களும், சதானந்த கவுடாக்களும், ஜனார்த்தன பூஜாரிகளும், பசவன கவுடா பாட்டீல்களும், அங்கே சுதந்திரமாக ஜாதி பெயரை சூட்டிக்கொள்ள முடிகிறது.

ஜாதி வேர்
கவுடா, பாட்டீல் பூஜாரி என்பதெல்லாம் அவர்களின் பெயர்கள் என தமிழகத்திலுள்ள கணிசமானோர் நினைத்திருக்க கூடும். ஆனால், அதில் ஒவ்வொன்றிலும் ஜாதியின் விதை வேரூன்றப்பட்டுள்ளது. இத்தனைக்கும் பெரியாரை போன்ற ஒரு புரட்சியாளர் பசவண்ணர் தோன்றிய மண்தான் கர்நாடகா. ஆனால், பெரியாருக்கும், பசவண்ணருக்குமான அணுகுமுறை வெவ்வேறாக இருந்தது.

உள்ளும், வெளியேயும்
கடவுளே இல்லை என்றார் பெரியார், உடம்பே கோயில், உள்ளே இருக்கிறார் சிவன் என்று சித்தர்கள் வரிசையில், தத்துவத்தை கொடுத்தவர் பசவண்ணர். ஜாதிக்கு வெளியே வந்து போராட அரைகூவல் விடுத்தவர் பெரியார். எது கீழ் ஜாதி என்றார்களோ அதையே மேல் ஜாதியாக மாற்றிக்காட்டுவோம் என்று உள்ளேயே புரட்சி செய்தவர் பசவண்ணர்.

காரணம் இதுதான்
பெரியாரை போன்றே ஜாதி ஏற்றத்தாழ்வுகளை களைவதில் பசவண்ணர் 12ம் நூற்றாண்டில் புரட்சிகளை முன்னெடுத்தார். ஆனால், அதை மதம், மற்றும் ஜாதிக்குள்ளாகவே இருந்து செய்தார். இதனால் ஒடுக்கப்பட்டவர்கள் முன்னேற்றம் கண்டனர். ஆனால், ஜாதிக்குள் இருந்து வெளியே வரவில்லை. இதுதான் தமிழகத்திற்கும், கர்நாடகாவிற்கும் உள்ள மிகப்பெரிய வேற்றுமை. நோக்கம் ஒன்று என்றாலும் தேர்ந்தெடுத்த வழிமுறைகளில் மாறுபாடு இருந்ததுதான் இன்றைக்கும் கர்நாடகா ஜாதி பெயரை விட்டுக்கொடுக்காததற்கு காரணம். எனவேதான் லிங்காயத்து ஜாதியை தனி மதப்பிரிவாக உருவாக்கும் முயற்சியில் கர்நாடக அரசு ஈடுபட்டுள்ளது. ஜாதி அங்கே பகிரங்கமாக அரசியல் அஸ்திரமாக்கப்பட்டுள்ளது.
-
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications