ஆதார் சட்டத்திலேயே அந்தரங்க உரிமை பற்றி உள்ளதே.. மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நறுக் கேள்வி
டெல்லி: ஆதார் சட்டத்தில் ஒரு பிரிவு பிரைவசி தொடர்பாக இருக்கும்போது அது அடிப்படை உரிமை இல்லை என்று எப்படி சொல்கிறீர்கள் என சுப்ரீம் கோர்ட் மத்திய அரசிடம் கிடுக்குப்பிடி கேள்வி எழுப்பியது.
தலைமை நீதிபதி ஜேஎஸ் கேஹர் தலைமையிலான 9 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன பெஞ்ச் ஆதார் அந்தரங்க உரிமையா இல்லையா என்பது குறித்த வழக்கை விசாரித்து வருகிறது.

அப்போது, நீதிபதிகளில் ஒருவரான நாரிமன் "ஆதார் சட்டத்தின் ஒரு பிரிவு அந்தரங்க உரிமைகள் குறித்து பேசுகிறது. ஆனால் நீங்களோ (மத்திய அரசு) ஆதாரில் அந்தரங்க உரிமை வழங்கப்படவில்லை என எப்படி கூறுகிறீர்கள்" என கேள்வி எழுப்பினார்.
மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஸ்கர் மேத்தா, அட்டார்னி ஜெனரல் கேகே வேணுகோபால் ஆகியோர் இவ்வழக்கில் வாதம் சமர்ப்பித்துள்ளன நிலையில், மகாராஷ்டிர அரசு சார்பில் வாதம் தொடங்கியுள்லது.
நீதிபதி சந்திரசூட் கூறுகையில், "ஆதார், சமூக நீதி திட்டங்களுக்கு உதவாது என்று யாருமே கூறவில்லை. ஆனால், ஆதார் விவரங்கள் வெளியே லீக் ஆனால் என்னவாகும் என்பதுதான் மனுதாரர் கவலை" என குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications