மழை வந்ததால் மகிழ்ச்சி... ஆனால் பின்னாடியே டெங்கு வந்தால் என்ன செய்வது.. கவலையில் பெங்களூரு!

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: தென்மேற்குப் பருவமழை காரணமாக பெங்களூருவில் மீண்டும் குளுகுளு கிளைமேட் திரும்பியுள்ளது. ஆனால், காலை மற்றும் மாலை வேளைகளில் மழை பெய்வதால் பள்ளி செல்லும் குழந்தைகள், வேலைக்குச் செல்வோர் பெரும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர்.

தமிழகத்தைப் போலவே கர்நாடகாவிலும் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் விட்டு விட்டு மழை கொட்டி வருகிறது.

எப்போதும் குளுகுளுவென இருக்கும் நகரமான அறியப்படும் பெங்களூரு, கோடையின் போது கொளுத்தும் வெயிலால் நரகமானது. ஆனால் தற்போது மீண்டும் அங்கு மழை காரணமாக அங்கு குளுமை திரும்பியுள்ளது.

காலை, மாலையில்...

காலை, மாலையில்...

ஆனால், பெரும்பாலும் குறிப்பாக காலை மற்றும் மாலை வேளைகளில் மழை பெய்வதால், பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் வேலைக்குச் செல்வோர் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். சரியான நேரத்திற்கு அலுவலகம் செல்ல முடியாமல், வீடு திரும்ப முடியாமல் பாதிக்கப்படுகின்றனர்.

சுகாதாரச் சீர்கேடு...

சுகாதாரச் சீர்கேடு...

மழை காரணமாக சாலைகளில் நீர் தேங்குவதால், போக்குவரத்தும் பாதிக்கப்படுகிறது. ஆங்காங்கே கழிவுநீர் மழை நீரோடு கலப்பதால் சுகாதாரச் சீர்கேடு ஏற்படும் அபாயமும் உள்ளது.

ஜூலை...

ஜூலை...

வழக்கமாக ஆண்டுதோறும் ஜூன் மாதத்தில் பெய்யும் மழையளவையே இந்தாண்டும் பெங்களூரு பெற்றிருப்பதாக வானிலை ஆய்வு மையங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், ஜூலையில் மழையளவு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

நோய் பரவும் அபாயம்...

நோய் பரவும் அபாயம்...

இதனால் மீண்டும் தங்கள் நகருக்கு குளுகுளு சீதோஷ்ணம் கிடைத்து விட்ட மகிழ்ச்சி ஒருபுறம் மக்கள் மத்தியில் இருக்க, மறுபுறம் டெங்கு உள்ளிட்ட மழைக்கால நோய் பரவும் அச்சமும் காணப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+