விபத்துக்களை தடுக்க 3,430 ஆளில்லா லெவல் கிராசிங்குகளை அகற்ற திட்டம்- செலவு ரூ6,581 கோடி!
டெல்லி : நாடு முழுவதும் உள்ள 3430 ஆளில்லா ரயில்வே கேட்டுகள் அகற்றப் படும் என ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப் பட்டுள்ளது.
2015- 2016-ம் நிதியாண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை லோக்சபாவில் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தாக்கல் செய்துள்ளார். வறுமை ஒழிப்பை இலக்காக கொண்டு ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப் பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், ரயில்வே வேகத்தை அதிகரிக்க முக்கியத்துவம் அளிக்கப்படும் எனவும், நெரிசல் மிக்க தடத்தில் கூடுதல் ரயில் பாதைகள் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது. தாமதமின்றி ரயில்கள் சரியான நேரத்துக்கு செல்வது உறுதி செய்யப்படும் எனவும், தொலைநோக்கு திட்டத்துக்கு பாதகமின்றி உடனடி தேவை நிறைவேற்றப்படும் எனவும் பட்ஜெட்டில் ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஆளில்லாத ரயில்வே கிராசிங்குகளைக் கடக்க முற்பட்டு வாகனங்கள் விபத்தில் சிக்குவது அதிகரித்து வருகிறது. எனவே, வருங்காலத்தில் இத்தகைய விபத்துக்களைத் தடுக்கும் வகையில், ரூ. 6,581 கோடி செலவில் இந்தியா முழுவதும் உள்ள 3430 ஆளில்லா லெவல் கிராசிங்குகளில் ஒழிக்கப்பட்டு அங்கு புதிய ஊழியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்படுள்ளது.
மேலும், விபத்துக்களை தவிர்ப்பதற்காக ஆளில்லா கிராசிங்களில் ஒளி மற்றும் ஒலி மூலம் எச்சரிக்கைகள் அமைக்கப்படும். பாதுகாப்புக்காக இஸ்ரோவுடன் இணைந்து திட்டங்கள் அமைக்கப்படும் எனவும் அறிவிக்கப் பட்டுள்லது.
-
விவாகரத்து முடியாமல் 'டூயட்' பாடினால் 10 ஆண்டு சிறை? - விஜய்க்கு சிக்கலாகும் பிரிவு 69.. மாட்டுனாரு -
Sani Peyarchi: சனிப்பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளும் பெறப்போகும் பலன்கள்.. முழு விவரம் -
அமெரிக்காவை கைவிடும்.. சவுதி அரேபியா, குவைத், யு.ஏ.இ, கத்தார்.. அமெரிக்க சாம்ராஜ்யத்தின் அஸ்தமனம்? -
ஒவ்வொன்றும் ஒரு வெடி குண்டுக்கு சமம்.. சங்கீதா கையில் அந்த வீடியோ ஆதாரம்.. வசமாக சிக்கும் விஜய்! -
பல்லாவரம் ஜிஎஸ்டி சாலை ஸ்தம்பித்தது.. என்ன காரணம்.. தாம்பரம் போலீசாருக்கு பறந்த கோரிக்கை -
ஈரானை தாக்க.. இந்திய துறைமுகத்தை பயன்படுத்தியதா அமெரிக்கா? மத்திய அரசு மறுப்பு -
தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி மயிலாப்பூர் வழியாக கடற்கரைக்கு ரயில்கள்.. ரயில்வேக்கு பறந்த கோரிக்கை -
பர்மிஷன் கொடுக்க டிரம்ப் யாரு? இந்தியாவின் இறையாண்மை அமெரிக்காவின் கையில் அடகு? ஷாக் சம்பவம் -
பெங்களூரில் மருமகளை சமையல் செய்ய வேண்டாம் என்ற மாமியார்.. அதுக்கு இப்படியா செய்வாங்க -
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ராஜினாமா! சிறுவயது ஆசைக்காக ராஜ்யசபா எம்பியாகிறார்.. அவரே தந்த விளக்கம் -
"இந்தியாவின் எதிரி".. அஜர்பைஜானை குறிவைத்து அடித்த ஈரான்.. தீப்பற்றி எரியும் நாடு - அதிரடி -
அது விக்கெட் இல்லமா.. வான்கடே மைதானத்தில் துள்ளிக் குதித்த சாக்ஷி.. அமைதிபடுத்தி கிண்டல் செய்த தோனி












Click it and Unblock the Notifications