மோடி தன்னை மாற்றிக் கொண்டால் அவரை ஆதரிப்பேன்: ஷியா மதகுரு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தம்மை மாற்றிக் கொண்டால் அவரது கடந்த காலத்தை பற்றி நான் கவலைப்படமாட்டேன்...அவரை ஆதரிப்பேன் என்று ஷியா முஸ்லிம்களின் மதகுருவான மெளலானா கல்பி சாதிக் தெரிவித்துள்ளார்.
ஷியா மதகுருவும் அனைத்திருந்த முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் துணை தலைவருமான மெளலானா சித்திக் கூறுகையில், நான் அனைத்து முஸ்லிம்களுக்காக பேசவில்லை. ஆனால் என்னைப் பொறுத்தவரை மோடி தம்மை மாற்றிக் கொண்டால் அவரது கடந்த காலத்தைப் பற்றி கவலைப்படமாட்டேன்.

அவர் தம்மை மாற்றிக் கொண்டால் அவரை தனிப்பட்ட முறையில் நான் ஆதரிப்பேன். குஜராத் கலவரத்துக்குப் பின்னர் மோடி மீதான நம்பிக்கை பொய்த்துவிட்டது.
குஜராத் கலவரத்துக்காக மோடி மன்னிப்பு கேட்பதைவிட தமது நடவடிக்கைகள் மூலம் அவர் தம்மை மாற்றிக் கொள்வதுதான் அவசியம் என்றார்.












Click it and Unblock the Notifications