பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் ராபர்ட் வதேரா சிறையில் இருப்பார்: உமா பாரதி
டெல்லி: தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ராபர்ட் வதேராவை சிறையில் தள்ளுவேன் என்று பாஜக மூத்த தலைவர் உமா பாரதி மிரட்டல் விடுத்துள்ளார்.
ஜான்சியில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய பாரதிய ஜனதா மூத்த தலைவர் உமா பாரதி, "எங்கள் கட்சியினரே என் மீது கோபம் கொண்டாலும் பரவாயில்லை. தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நான் ராபர்ட் வதேராவை சிறையில் தள்ளுவேன்" என்று மிரட்டல் விடுத்துள்ளார்.
நில ஒப்பந்தங்கள் தொடர்பாக பாரதிய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவை கடுமையாக விமர்சித்து வருகிறார்.
இது தொடர்பாக நான் பாரதிய ஜனதா தலைவர்கள் மீது புகார் அளிப்பேன் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர்களின் ஒருவரான திக்விஜய் சிங் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் ராபர்ட் வதேராவை சிறையில் அடைப்பேன் என்கிற ரீதியில் பேசியுள்ளார் உமா பாரதி.