ஸ்டாலின் லண்டன் சென்றதால்தான் மேட்டூர் அணை நிரம்பியது.. முதல்வர் நக்கல்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 88 அடியை தாண்டியுள்ளது. இன்று இரவு மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை தொடும் என்று கூறப்படுகிறது.

காவிரியிலிருந்து தமிழகத்திற்கு 1.04 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கர்நாடகாவில் பெய்து வரும் மழையால் கபினி அணை வேகமாக நிறைந்தது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 105 அடியை தாண்டியுள்ளது.

Will open Cauvery from Mettur for agri usage says TN CM

கபினியிலுருந்து 40,416 கனஅடி வீதம் உபரிநீர் திறந்துவிடப்படுகிறது. அதேபோல் கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து 62,000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. இந்த நிலையில் காவிரி நீர் திறப்பு குறித்து கோவை விமான நிலையத்தில் முதல்வர் பேட்டி அளித்தார்.

அதில், ஸ்டாலின் லண்டன் சென்றுள்ளதால் அணைகள் நிரம்பியுள்ளது. இவ்வளவு நாள் நிரம்பாத அணை அவர் லண்டன் சென்றது நிரம்பியுள்ளது. அவர் இல்லாதபோது தமிழ்கத்தில் மழை பெய்தது. இதோ அவர் வந்ததும் மழை நின்றுவிட்டது.

அவரின் ராசி அப்படி. தமிழகத்தில் எல்லா அணைகளும் நிரம்பியுள்ளது. திமுக ஆட்சியில் இந்த நல்ல விஷயம் எல்லாம் நடந்தது இல்லை. தமிழக ஆட்சி நன்றாக இருக்கிறது. அதனால் அணை நிரம்பியுள்ளது.

காவிரியில் தற்போது அதிக தண்ணீர் வருகிறது. பாசனத்திற்கு நாளை தண்ணீர் திறக்கப்படும். மேட்டூர் அணை நாளை காலை பத்து மணிக்கு திறக்கப்படும் என்று முதல்வர் பேட்டியில் கூறியுள்ளார் .

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+