ஓர் ஏவுகணைக்காக இந்தியா மீது பொருளாதார தடை விதிக்க போகிறதா அமெரிக்கா.. என்ன நடக்கிறது?
இந்தியா - ரஷ்யா செய்திருக்கும் எஸ்-400 ஏவுகணை ஒப்பந்தம் காரணமாக அமெரிக்கா இந்தியா மீது பொருளாதார தடை விதிக்க வாய்ப்புள்ளது.
Recommended Video

டெல்லி: இந்தியா - ரஷ்யா செய்திருக்கும் எஸ்-400 ஏவுகணை ஒப்பந்தம் காரணமாக அமெரிக்கா இந்தியா மீது பொருளாதார தடை விதிக்க வாய்ப்புள்ளது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பிரதமர் மோடியுடன் இன்று டெல்லியில் சந்திப்பு நடத்தினார். இதில் 20 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
மேலும் எஸ்-400 ஏவுகணை ஒப்பந்தமும் கையெழுத்தாகி உள்ளது. இந்த ஏவுகணை இந்திய பாதுகாப்பு துறைக்கு வலு சேர்க்கும். இந்த ஒப்பந்தம் 36 ஆயிரம் கோடி ரூபாயில் கையெழுத்தாகி உள்ளது. இதனால் இந்தியா மீது அமெரிக்கா கோபமாக உள்ளது.

எப்போது உருவாக்கப்பட்டது
இத்தனை பிரச்சனைக்கும் காரணமான இந்த ஏவுகணை எஸ்-40, கடந்த 1990 ஆண்டிலேயே உருவாக்கப்பட்டுவிட்டது. அப்போது இது எஸ் - 300 என்று அழைக்கப்பட்டது. ரஷ்ய தயாரிப்பான இது தொடர்ந்து அப்டேட் செய்யப்பட்டு வந்தது. அதன்பின் 2007ம் ஆண்டில் முழுமையாக ரஷ்ய ராணுவத்தில் செயல்பாட்டிற்கு வந்தது.

எப்படிப்பட்டது
இந்த எஸ்-400 ஏவுகணை, 4 சிறிய ஏவுகணைகளை தனக்குள் உள்ளடக்கியது. தற்போது உலகில் இருக்கும் ஏவுகணைகளில் மிகவும் வலிமை வாய்ந்த ஏவுகணை இதுதான் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் ஒரே நேரத்தில் 300 டார்கெட்டுகளை தாக்கி அழிக்க முடியும். நான்கும் சேர்த்து வெவ்வேறு திசையில் சென்று தாக்க முடியும்.

மிக துல்லியம்
வானத்தில் செல்லும் எதிரிநாட்டு போர் விமானங்களை தாக்கி அழிக்க கூடியது. அதோடு ரேடாரில் கண்டுபிடிக்க முடியாத ஸ்டெல்த் ரக விமானங்களையும் தாக்கி அழிக்க கூடியது. இதை இந்தியா வாங்கும் பட்சத்தில் அது பாகிஸ்தானுக்கும், சீனாவிற்கும் பெரிய பிரச்சனையாக இருக்கும். துல்லியம்தான் இதன் சிறப்பு.

தடை விதித்தது
அமெரிக்கா தனது நட்பு நாடுகளுடன் செய்திருக்கும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் ரஷ்யா, ஈரான், வடகொரியா ஆகிய நாடுகளிடம் இருந்து ஏவுகணைகள் வாங்க கூடாது. சில போர் கருவிகள் தவிர (விமானம் போன்றவை) மிகவும் சக்தி வாய்ந்த ஏவுகணை போன்ற கருவிகளை வாங்க கூடாது. இதை மீறி வாங்கினால் அந்நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்கப்படும். இதனால் சீனா மீது ஏற்கனவே அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது.

வாய்ப்பு என்ன உள்ளது
இதனால் அமெரிக்கா மூன்று விதமான முடிவுகளை எடுக்க வாய்ப்புள்ளது.
1. இந்தியா மீது பொருளாதார தடை விதிப்பது.
2. அமெரிக்க அதிபர் தனக்கு உரிய அதிகாரம் மூலம் இந்தியாவிற்கு மட்டும் பொருளாதார தடையில் இருந்து விலக்கு அழிப்பது.
3. இந்தியா ரஷ்யாவுடனான போர் உறவுகளை உடனே முறிக்க முடியாது என்பதால், இந்த போர் வர்த்தக உறவை முறித்துக் கொள்ள இன்னும் கொஞ்சம் கால அவகாசம் கொடுப்பது. இந்த மூன்றாவது முடிவிற்கே அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications