For Daily Alerts
Just In
மக்களின் நம்பிக்கைகளை நிறைவேற்றுவோம்: பிரதமர் மோடி உறுதி
டெல்லி: மக்களின் நம்பிக்கைகளை நிச்சயம் நாங்கள் நிறைவேற்றுவோம் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.
16-வது லோக்சபாவின் முதல் கூட்டத்தொடரில் கலந்து கொள்ள நாடாளுமன்றத்துக்கு வந்த பிரதமர் மோடி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
ஜனநாயகத்தின் கோயிலாகத் திகழும் இந்த நாடாளுமன்றத்தில், மக்களின் நம்பிக்கையையும், தேவைகளையும் அறிந்து அவற்றை நிறைவேற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசு நிச்சயமாக செய்யும்.
இவ்வாறு நரேந்திர மோடி கூறினார். பின்னர் சபை நடவடிக்கைகளில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
லோக்சபாவில் தற்காலிக சபாநாயகர் கமல்நாத் அவையை வழிநடத்தினார். மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டே மறைவுக்கு இரங்கல் தெரிவித்து சபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன.
Comments
English summary
In brief comments before entered parliament, Prime Minister Modi promised to "fulfil the dreams" of the people of India who have given his party the first parliamentary majority for 30 years. "I assure the people of this country that in the temple of democracy we will work hard to fulfil the dreams and aspirations of the common man in India," said Modi.
Story first published: Wednesday, June 4, 2014, 13:32 [IST]