முசாபர்நகரில் 48 வயது பெண் சீரழிக்கப்பட்டு கல்லால் அடித்து கொலை
Subscribe to Oneindia Tamil
முசாபர்நகர்: உத்தர பிரதேசத்தில் 48 வயது பெண் ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டு கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ளது ஷுகர்தல். அந்த கிராமத்தைச் சேநர்ந்த 48 வயது பெண் ஒருவர் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தது நேற்று கண்டுபிடிக்கப்பட்டது.
அவரது உடல் அருகே வளையல்கள் உடைந்து கிடந்தன. அவரை யாரோ பாலியல் பலாத்காரம் செய்து அதன் பிறகு கல்லால் அடித்துக் கொன்றிருக்கக்கூடும் என்று போலீசார் கருதுகின்றனர்.
போலீசார் அந்த பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications