36 நாட்கள் கூட்டு பலாத்காரம்.! வயலில் இருந்த பெண்ணை கடத்தி சென்று வெறிச்செயல்.. மிரண்ட ராஜஸ்தான்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் அரங்கேறியுள்ள ஒரு கூட்டுப் பாலியல் வன்புணர்வு சம்பவம் மாநிலத்தையே அதிர வைத்து உள்ளது.
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக பாலியல் குற்றங்கள் சமீப ஆண்டுகளில் பல மடங்கு அதிகரித்து உள்ளதாகக் கூறப்படுகிறது.
அதிலும் குறிப்பாக சில வட மாநிலங்களில் கூட்டுப் பலாத்கார சம்பவங்கள் தொடர்ச்சியாக அரங்கேறி வருகிறது. அப்படியொரு சம்பவம் தான் இப்போது ராஜஸ்தான் மாநிலத்தில் அரங்கேறி உள்ளது.

புகார்
ஹரியானா மாநிலம் நூஹ் மாவட்டத்தில் 45 வயது மதிக்கத்தக்கப் பெண் ஒருவர் போலீஸ் நிலையத்தில் கண்ணீருடன் புகார் அளிக்க வந்துள்ளார். அந்தப் பெண் அளித்த புகாரைப் பார்த்து போலீசாரே ஒரு நிமிடம் அதிர்ச்சி அடைந்துவிட்டனர். ஹரியானாவில் வயலில் இருந்த தன்னை கும்பல் ஒன்று காரில் ராஜஸ்தானுக்குக் கடத்திச் சென்றதாகவும் அங்கு 36 நாட்கள் கடத்தி வைத்து தன்னை கூட்டுப் பலாத்காரம் செய்ததாகப் புகார் அளித்து உள்ளார்

கடத்தல்
இது தொடர்பாக அந்த பெண் அளித்துள்ள புகாரில், "கடந்த ஜூலை 27ஆம் தேதி தீவனம் சேகரிக்க வயலுக்குச் சென்று இருந்தேன். அப்போது காரில் வந்த சில ஆண்கள் என்னைத் துப்பாக்கி முனையில் கடத்தி சென்றனர். அவர்கள் என்னை ராஜஸ்தானில் உள்ள ஒரு கிராமத்தில் அடைத்து வைத்தனர். அங்கு எனக்கு மயக்க மருந்து கொடுத்த அவர்கள், தவறான முறையில் வீடியோ எடுத்து வைத்தனர்.

36 நாட்கள் கூட்டுப் பலாத்காரம்
சுமார் 36 நாட்கள் அவர்கள் அங்கேயே என்னைப் பிணையக் கைதியாக வைத்து இருந்தனர். அந்தச் சமயத்தில் பல முறை அவர்கள் என்னைக் கூட்டுப் பலாத்காரம் செய்தனர். அவர்கள் அங்கேயே என்னை அடைத்து வைத்து இருந்தனர். என்னால் அங்கிருந்து தப்பித்து வரவும் கூட முடியவில்லை. ஒரு மாதத்திற்கு மேலாக என்னைக் கடத்தி வைத்து இருந்த அவர்கள் தொடர்ச்சியாகக் கூட்டுப் பலாத்காரம் செய்தார்கள்.

வீடியோ
அவர்கள் எனக்கு மயக்க மருந்து கொடுத்து எடுத்த தவறான வீடியோவை வெளியிடக் கூடாது என்றால் பணம் தர வேண்டும் என மிரட்டினர். எனது குடும்பத்தினர் அவர்களுக்கு 3 லட்சம் ரூபாய் கொடுத்த பின்னரே அவர்கள் என்னை விடுவித்தனர்" என்று அவர் தெரிவித்தார். இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், முதற்கட்ட விசாரணை இப்போது நடைபெற்று வருவதாகவும் விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.

அதிகரிக்கும் சம்பவங்கள்
பொது இடங்களில் இருந்து பெண்கள் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்படும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. முன்னதாக கடந்த செப்டம்பர் 8ஆம் தேதி இதேபோலத் தான் உத்தரப்பிரதேசத்தின் கோரக்பூர் ரயில் நிலையம் அருகே நின்று கொண்டு இருந்த 25 வயது பெண்ணை மூன்று பேர் கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்தனர். இந்தச் சம்பவம் அப்போது பேசுபொருள் ஆகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications