டெல்லியில் பலாத்கார முயற்சி... 4-ஆவது மாடியில் இருந்து தள்ளிவிடப்பட்ட பெண்
டெல்லியில் நண்பர் ஒருவர் பலாத்கார முயற்சி செய்தபோது அந்த பெண் அலறியதால் ஆத்திரம் அடைந்த அந்த நபர் அவரை 4-ஆவது மாடியில் இருந்து தள்ளிவிட்டார்.
டெல்லி: டெல்லியில் நண்பரால் பாலியல் பலாத்கார முயற்சி செய்தபோது பெண் அலறியதால் ஆத்திரம் அடைந்த நபர் அவரை 4-ஆவது மாடியில் இருந்து தள்ளிவிட்டார்.
டெல்லியைச் சேர்ந்த 21 வயது பெண், அங்குள்ள 5 நட்சத்திர ஹோட்டலில் உதவி சமையல் கலைஞராக பணியாற்றி வருகிறார். இவருடன் பணியாற்றும் நண்பர்கள் சிலர் இவருக்கு போன் செய்து ஒரு ஷாப்பிங் மாலுக்கு செல்லலாம் என அழைத்தனர்.

அதன்பேரில் சென்ற அவரை பேகாம்பூரில் உள்ள கட்டி முடிக்கப்படாத கட்டடத்துக்கு அழைத்து சென்றனர். அப்போது பெண்ணின் துணிகளை நண்பர்களில் ஒருவர் கிழித்ததாக கூறப்படுகிறது.
நிலைமையின் விபரீதத்தை உணர்ந்த அந்த பெண் உதவிக்கு அழைத்து கூச்சலிட்டார். இதனால் ஆத்திரமடைந்த நபர் அந்த பெண்ணை 4-ஆவது மாடியில் இருந்து தள்ளிவிட்டார். இதனால் படுகாயங்களுடன் உடம்பில் துணிகள் இல்லாத நிலையில் ரத்த வெள்ளத்தில் ஒரு கேபிள் வயரில் தொங்கிக் கொண்டிருந்தார்.
போலீஸார் விசாரணை
இந்த சம்பவம் தொடர்பாக சிலர் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவம் இடத்துக்கு வந்த போலீஸார் பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதுதொடர்பாக அப்பெண்ணின் நண்பர்களிடம் விசாரணை நடத்தி ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications