ம.பி. அரசு மருத்துவமனையில் சிறுமியின் தாயை பலாத்காரம் செய்த வார்டு பாய், பாதுகாவலர்
ஹோஷங்காபாத்: மத்திய பிரதேசத்தில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் 30 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த மருத்துவமனை ஊழியர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
மத்திய பிரதேச மாநிலம் ஹோஷங்காபாத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிறுமி ஒருவர் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டார். அவருடன் அவரது 30 வயது தாயார் தங்கியிருந்தார். இந்நிலையில் கடந்த 19ம் தேதி இரவு கழிவறையில் இருந்து வெளியே வந்த அந்த பெண்ணை வார்டு பாய் தீபக் மாஜ்ஹி மற்றும் பாதுகாவலர் ஆதித்யா ஆகியோர் அருகில் கட்டுமானப் பணி நடக்கும் கட்டிடத்திற்கு இழுத்துச் சென்றனர்.
அங்கு வைத்து அவர்கள் அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தனர். இது குறித்து யாரிடமாவது கூறினால் அவ்வளவு தான் என்று அவர்கள் அப்பெண்ணை மிரட்டி வைத்தனர். ஆனால் அப்பெண் நடந்தது குறித்து தனது கணவரிடம் தெரிவித்தார். அவர் இது குறித்து போலீசாரிடம் புகார் கொடுத்தார்.
அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் தீபக் மற்றும் ஆதித்யாவை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications