வளைகுடா நாடுகளில் விற்பனை செய்யப்படும் ஆந்திரப் பெண்கள்.. பரபரப்புத் தகவல்கள்
ஹைதராபாத்: வளைகுடா நாடுகளில் ஆந்திரப் பெண்கள், விலை வைத்து விற்பனை செய்யப்படுவதாகவும், இதைத் தடுத்து அவர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆந்திர மாநில என்ஆர்ஐக்கள் நலத் துறை அமைச்சர் பல்லே ரகுநாத ரெட்டி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்குக் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து பெண்கள் வீட்டு வேலைக்காக வளைகுடா நாடுகளுக்குச் செல்கின்றனர். அவ்வாறு வீட்டு வேலைக்காக ஆந்திராவில் இருந்து சென்ற பெண்கள் பலர் பொய்யான வழக்குகளில் சிக்க வைக்கப்பட்டு, சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளதாக ஆந்திர அமைச்சர் பல்லே ரகுநாத ரெட்டி புகார் தெரிவித்துள்ளார்.
மேலும், அவர்கள் செக்ஸ் அடிமைகளாக விற்பனை செய்யப்பட்டு, கடும் சித்ரவதைகளை அனுபவிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

நடவடிக்கை தேவை...
மேலும், இது குறித்து ஆந்திர மாநில என்ஆர்ஐக்கள் நலத் துறை அமைச்சர் பல்லே ரகுநாத ரெட்டி கூறுகையில், "அந்தப் பெண்கள் மிகுந்த வேதனைக்குள்ளாகியுள்ளனர். அவர்களை மீட்டு உடனடியாக நாட்டுக்குக் கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக இந்திய தூதரக அதிகாரிகளுக்கு மத்திய அரசு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

சுமூக முடிவு...
சம்பந்தப்பட்ட வளைகுடா நாடுகளின் அரசுகளுடன் பேசி இந்த விவகாரத்தை விரைவில் சுமூகமாக முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உணவு, உடை உள்ளிட்டவை உடனடியாக வழங்கப்பட வேண்டும்" என்றார்.

இந்தியத் தொழிலாளர்கள்...
பஹ்ரைன், குவைத், கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன் ஆகிய நாடுகளில் 60 லட்சம் இந்தியத் தொழிலாளரக்ள் இருப்பதாக ஒரு புள்ளி விவரத் தகவல் தெரிவிக்கிறது. இவர்களில் பல பெண்களும் அடக்கம்.

கொடுமைகள்...
தங்களது குடும்பத்தைப் பிரிந்து கை நிறைய சம்பாதிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இங்கு வீட்டு வேலை செய்ய வரும் இவர்களில் பலரும் ஏஜென்டுகளாலும், வேலையில் சேரும் இடத்தில் உள்ல முதலாளிகளாலும் பல்வேறு கொடுமைக்கு ஆளாகின்றனர்.

பெண்கள் விற்பனை...
ரெட்டி தனது கடிதத்தில் மேலும் கூறுகையில், "ஆந்திரா மட்டுமல்லாமல் தெலுங்கானாவைச் சேர்ந்த பெண்களும் கூட பெருமளவில் இதுபோல ஏமாற்றப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை ஏதோ சில்லறை விற்பனைக் கடைகளில் பொருட்களை விற்பது போல விற்பனை செய்கிறார்கள்' எனத் தெரிவித்துள்ளார்.

விலை நிர்ணயம்...
சவுதி அரேபியாவில் ஒரு பெண்ணிற்கு குறைந்தது ரூ. 4 லட்சம் விலை வைக்கப்படுகிறதாம். பஹ்ஹைனில் ரூ. 1 லட்சம் முதல் 2 லட்சம் விலை நிர்ணயித்துள்ளனராம். இவர்களை தீவிரவாதிகளுக்கும் விற்பனை செய்வதாக அதிர்ச்சித் தகவல்கள் வருகின்றன.

அமைச்சர்கள் குழு...
சமீபத்தில் வளைகுடா நாடுகளில் பாதிக்கப்பட்ட 25 பெண்கள் அரசிடம் உதவி கோரி கடிதம் அனுப்பியுள்ளனர். இவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். விரைவில் ஆந்திர மாநில அமைச்சர்கள் குழு சவுதி செல்லவுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications