மார்கண்டேய கட்ஜுக்கு எதிரான நாடாளுமன்ற தீர்மானத்தை ரத்து செய்ய முடியாது: சுப்ரீம் கோர்ட்
டெல்லி: உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜுவிற்கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்த தீர்மானத்தை எதிர்த்து உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு சமீபத்தில் சுதந்திர போராட்ட தியாகிகளான, மகாத்மா காந்தி மற்றும் சுபாஷ் சந்திர போஸ் ஆகிய இருவரையும் கடுமையாக விமர்சித்து சில கருத்துக்களை கூறினார்.

அவரது தொடர் நடவடிக்கைகளால், அதிருப்தியடைந்த மத்திய அரசு கட்ஜுவை விமர்சித்து தீர்மானம் ஒன்றை நாடாளுமன்றத்தில் நிறைவற்றியிருந்தது.
மத்திய அரசின் இந்த தீர்மானத்தை எதிர்த்து மார்க்கண்டேய கட்ஜு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால், கட்ஜு நாடாளுமன்ற தீர்மானத்தை எதிர்த்து மனு தாக்கல் செய்வதே முடியாத காரியம் என கூறி மத்திய அரசு தாக்கல் செய்திருந்தது.
கட்ஜு தாக்கல் செய்த மனு நீதிபதிகள் பினாகி சந்திர கோஷ் மற்றும் யு .யு.லலித் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, மனுவை ஏற்காமலே தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதேநேரம், நாடாளுமன்ற தீர்மானத்தை எதிர்க்கவே முடியாது என்ற மத்திய அரசின் வாதத்தையும் உச்சநீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications