என்எஸ்ஜி விவகாரத்தில் மத்திய அரசு தவறாக வழிநடத்தப்படுகிறது- பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா சாடல்
டெல்லி: அணுசக்தி விநியோக நாடுகளின் கூட்டமைப்பான என்.எஸ்.ஜி. விவகாரத்தில் மத்திய அரசு தவறாக வழிநடத்தப்படுவதாக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா கடுமையாக சாடியுள்ளார்.
என்.எஸ்.ஜி குழுவில் உறுப்பினராக சேர இந்தியா தீவிரமாக முயற்சித்தது. ஆனால் அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடாததை சுட்டிக்காட்டி சீனா உள்ளிட்ட நாடுகள் மிகக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன.

மேலும் இந்தியாவுக்கு சிறப்பு விலக்கு அளித்தால் பாகிஸ்தானையும் என்.எஸ்.ஜி.யில் சேர்க்க வேண்டும் எனவும் சீனா வலியுறுத்தியது. இதனால் தென்கொரியாவின் சியோலில் நடைபெற்ற என்.எஸ்.ஜி. கூட்டத்தில் இந்தியாவை உறுப்பினராக சேர்ப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில் என்எஸ்ஜியில் இந்தியா இடம்பெறும் விவகாரத்தில் மத்திய பாஜக அரசை பதவியில் உள்ள சிலர் தவறாக வழிநடத்துவதாக பாஜகவின் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா சாடியுள்ளார்.
இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த சின்ஹா, என்.எஸ்.ஜி.,யில் நாம் இடம்பெற்றால் தோற்றவராகி விடுவோம். நமக்கு இழப்பு தான் ஏற்படும். லாபம் கிடையாது. என்எஸ்ஜியில் இந்தியா இணையக்கூடாது என்பதை தெளிவாக தெரிவித்து கொள்கின்றேன். அங்கு விண்ணப்பிக்க தேவையில்லை. நமது அரசின் பாகிஸ்தான் தொடர்பான கொள்கைகள் முற்றிலும் தோல்வியடைந்துவிட்டது எனவும் விமர்சித்துள்ளார்.
பாஜக எம்பி சுப்பிரமணியன் சுவாமி மத்திய அமைச்சர்களை விமர்சித்து வரும் நிலையில் மூத்த தலைவரான யஷ்வந்த்சின்ஹாவும் மத்திய அரசை சாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
விஜய்யை என்டிஏ கூட்டணிக்கு அழைத்த பாஜக நிர்வாகியின் பதவி பறிப்பு.. நயினார் நாகேந்திரன் அதிரடி -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
வார்த்தைகளே பத்தலை.. தமிழ்நாட்டை விட்டு போறதை நினைக்கும் போது! 3 பக்க கடிதம் எழுதிய ஆர்.என்.ரவி -
கச்சா எண்ணெய் விலை பேரல் 100 டாலர் தாண்டாத வரை.. பெட்ரோல், டீசல் விலை உயராது.. மத்திய அரசு விளக்கம்! -
ONOE: "ஒரே நாடு ஒரே தேர்தல்.. நோயை விடக் கொடிய மருந்து" - முதல்வர் ஸ்டாலின் கடும் எதிர்ப்பு! -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம்












Click it and Unblock the Notifications