ரூ.8.75 லட்சம் கோடி வங்கிக் கடன்களை மீட்க வலியுறுத்தி மோடிக்கு யெச்சூரி கடிதம்
டெல்லி: பொதுத் துறை வங்கிகளில் இருந்து சில பெருநிறுவனங்கள் வாங்கியுள்ள ரூ.8.75 லட்சம் கோடி மதிப்பிலான வங்கிக் கடன்களை மீட்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி கடிதம் மூலமாக வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் சீதாராம் யெச்சூரி கூறியுள்ளதாவது:

ரிசர்வ் வங்கி அண்மையில் தாக்கல் செய்துள்ள நிதி நிலை அறிக்கையில் பொதுத் துறை வங்கிகள் மூலம் அளிக்கப்பட்ட ரூ.8.75 லட்சம் கோடி மதிப்பிலான கடன்கள் இன்னும் திரும்பி செலுத்தப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கடன்களைத் திருப்பிச் செலுத்தாததால் அனைத்து இந்தியர்களின் பணத்தையும் பெருநிறுவனங்கள் அபகரித்துக் கொண்டுள்ளன. எனவே, சம்பந்தப்பட்ட அனைத்து கடனாளிகளிடம் இருந்து மொத்த கடன்களையும் மீட்கும் வரை பொதுத் துறை வங்கிகளுக்கு மேலும் பணம் அளிக்கக் கூடாது.
அப்படி செய்யவில்லை எனில் பெரு முதலாளிகளின் ஊதாரித்தனத்துக்காக ஏழை இந்தியர்களின் பணத்தை மத்திய அரசு செலுத்தியது போலவும் தவறான வகையில் பெற்ற பணத்தைப் பாதுகாப்பது போலவும் ஆகிவிடும்.
இந்த வங்கிக் கடன்களை மீட்க மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் பலனளிக்கவில்லை. இந்தத் தொகையில் பெருமளவிலான பங்கு வெளிநாடுகளுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், அவற்றை மீட்க முடியாமல் போகலாம் என்றும் மத்திய அரசின் தலைமை கணக்காளர் சசி காந்த் சர்மா அண்மையில் கூறியுள்ளார்.
ஆகையால் முதல் 100 கடனாளிகளிடம் இருந்து நிலுவையில் உள்ள வங்கிக் கடன்களை மீட்க உடனடி செயல்திட்டம் வகுக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அக்கடிதத்தில் சீதாராம் யெச்சூரி வலியுறுத்தியுள்ளார்.
-
அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்திற்கு கூட வரலையே.. சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் பிரேக் அப்? -
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications