ரூ.8.75 லட்சம் கோடி வங்கிக் கடன்களை மீட்க வலியுறுத்தி மோடிக்கு யெச்சூரி கடிதம்
டெல்லி: பொதுத் துறை வங்கிகளில் இருந்து சில பெருநிறுவனங்கள் வாங்கியுள்ள ரூ.8.75 லட்சம் கோடி மதிப்பிலான வங்கிக் கடன்களை மீட்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி கடிதம் மூலமாக வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் சீதாராம் யெச்சூரி கூறியுள்ளதாவது:

ரிசர்வ் வங்கி அண்மையில் தாக்கல் செய்துள்ள நிதி நிலை அறிக்கையில் பொதுத் துறை வங்கிகள் மூலம் அளிக்கப்பட்ட ரூ.8.75 லட்சம் கோடி மதிப்பிலான கடன்கள் இன்னும் திரும்பி செலுத்தப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கடன்களைத் திருப்பிச் செலுத்தாததால் அனைத்து இந்தியர்களின் பணத்தையும் பெருநிறுவனங்கள் அபகரித்துக் கொண்டுள்ளன. எனவே, சம்பந்தப்பட்ட அனைத்து கடனாளிகளிடம் இருந்து மொத்த கடன்களையும் மீட்கும் வரை பொதுத் துறை வங்கிகளுக்கு மேலும் பணம் அளிக்கக் கூடாது.
அப்படி செய்யவில்லை எனில் பெரு முதலாளிகளின் ஊதாரித்தனத்துக்காக ஏழை இந்தியர்களின் பணத்தை மத்திய அரசு செலுத்தியது போலவும் தவறான வகையில் பெற்ற பணத்தைப் பாதுகாப்பது போலவும் ஆகிவிடும்.
இந்த வங்கிக் கடன்களை மீட்க மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் பலனளிக்கவில்லை. இந்தத் தொகையில் பெருமளவிலான பங்கு வெளிநாடுகளுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், அவற்றை மீட்க முடியாமல் போகலாம் என்றும் மத்திய அரசின் தலைமை கணக்காளர் சசி காந்த் சர்மா அண்மையில் கூறியுள்ளார்.
ஆகையால் முதல் 100 கடனாளிகளிடம் இருந்து நிலுவையில் உள்ள வங்கிக் கடன்களை மீட்க உடனடி செயல்திட்டம் வகுக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அக்கடிதத்தில் சீதாராம் யெச்சூரி வலியுறுத்தியுள்ளார்.
-
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம்












Click it and Unblock the Notifications