யே, தில் மாங்கே மோர்: மோடியின் பஞ்ச் டயலாக்
பலம்பூர்: இமாச்சல பிரதேசத்தில் நடந்த கூட்டத்தில் பேசிய பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, ஒரு குளிர்பான விளம்பரத்தில் வரும் இந்த உள்ளம் கேட்கிறதே மோர் என்ற வாசகத்தை பயன்படுத்தியுள்ளார்.
பாஜக பிரதமர் வேட்பாளர் மோடி இன்று இமாச்சல பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் செய்தார். அவர் பலம்பூர் என்ற இடத்தில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசுகையில்,
எனக்கு உங்களின் வாழ்த்துக்கள் தேவை. நான் உங்களுக்கு சேவை செய்ய விரும்புகிறேன். நீங்கள் காங்கிரஸுக்கு 60 ஆண்டுகளை கொடுத்தீர்கள். எனக்கு 60 மாதங்களை கொடுக்க மாட்டீர்களா? இந்த உள்ளம் கேட்குதே மோர்.
எனக்கு 60 மாதங்கள் கொடுங்கள். மேலும் பல விக்ரம் பத்ராக்கள் எங்கிருந்து வருவார்கள். அவர் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த வீரர். அவர் அடிக்கடி இந்த உள்ளம் கேட்குதே மோர் என்று கூறுவார். நானும் அதை தான் கூறி வருகிறேன். எனக்கு இமாச்சலில் உள்ள 4 தொகுதிகளும் வேண்டும். நாடு முழுவதும் 300 தாமரைகள் வேண்டும் என்றார்.