யே, தில் மாங்கே மோர்: கார்கில் வீரரின் வசனத்தை சுட்ட மோடி- வீரரின் தாய் கடும் எதிர்ப்பு

Subscribe to Oneindia Tamil

பலம்பூர்: இமாச்சல பிரதேசத்தில் நடந்த கூட்டத்தில் பேசிய பாஜக பிரதமர் வேட்பாளர் மோடி கார்கில் போரில் உயிர் நீத்த விக்ரம் பத்ராவின் வசனமான இந்த உள்ளம் கேட்கிறதே மோர் என்பதை பயன்படுத்தியதற்கு அவரது தாய் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

பாஜக பிரதமர் வேட்பாளர் மோடி இன்று இமாச்சல பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் செய்தார். அவர் பலம்பூர் என்ற இடத்தில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசுகையில்,

'Yeh dil maange more': Narendra Modi uses Kargil martyr's phrase, upsets his family

எனக்கு உங்களின் வாழ்த்துக்கள் தேவை. நான் உங்களுக்கு சேவை செய்ய விரும்புகிறேன். நீங்கள் காங்கிரஸுக்கு 60 ஆண்டுகளை கொடுத்தீர்கள். எனக்கு 60 மாதங்களை கொடுக்க மாட்டீர்களா? இந்த உள்ளம் கேட்குதே மோர். எனக்கு 60 மாதங்கள் கொடுங்கள். மேலும் பல விக்ரம் பத்ராக்கள் எங்கிருந்து வருவார்கள். அவர் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த வீரர். அவர் அடிக்கடி இந்த உள்ளம் கேட்குதே மோர் என்று கூறுவார். நானும் அதை தான் கூறி வருகிறேன். எனக்கு இமாச்சலில் உள்ள 4 தொகுதிகளும் வேண்டும். நாடு முழுவதும் 300 தாமரைகள் வேண்டும் என்றார்.

கார்கிலில் உயிர் இழந்த தனது மகனின் வசனத்தை மோடி பயன்படுத்தியதற்கு விக்ரம் பத்ராவின் தாயும் ஆம் ஆத்மி ஹமிர்பூர் வேட்பாளருமான கமல் கந்தா பத்ரா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மோடிக்கு போலி தேசப்பற்று ஏற்பட்டுள்ளதாக அவர் விமர்சித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+